என்னிடம் உனக்கு
பிடித்ததும் பிடிக்காததும் என்ன???
பிடித்ததும் பிடிக்காததும் என்ன???
குறும்பாக
தலைசாய்த்து ஒற்றைக்கண் மூடி
கேட்கிறாய் என்னை...
உச்சிமுகர்ந்து என் நெற்றியில்
நீ
முத்தமிடும்போதெல்லாம்
என் அன்னையை நினைவுப்படுத்துகிறாய்....
என் கன்னத்தில்
நீ
கவிதை முத்திரை பதிக்கும்போதெல்லாம்
ஏக்கத்தில் ஆழ்த்திவிடுகிறாய்...
தோல்விகளில் துவளும்போதெல்லாம்
நீ
இதழ் ஒத்தடம் தந்து
என்னை உயிர்ப்பிக்கிறாய்....
என் சுவாசத்தில் முழுமையாய்
ஆக்கிரமித்து
நேசம் பகிர்கிறாய்....
இன்னும் சொல்ல நிறைய....
சொல்லி முடிக்குமுன்
உன் அணைப்பில்
நான்.....
Tweet |