"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, October 2, 2012

வலைச்சரம் - அறுசுவை - இரண்டாம் நாள்


வலைச்சரம் - அறுசுவை - இரண்டாம் நாள்


TUESDAY, OCTOBER 2, 2012


அறுசுவை - கதம்ப உணர்வுகள் (இரண்டாம் நாள்)

அன்பு நண்பர்களே எல்லோரும் சௌக்கியமாப்பா? நேற்று முழுக்க எனக்கு ஊக்கம் தந்து, வரவேற்று, என் வலைப்பூவுக்கும் சென்று அன்புடன் எனக்கு ஆதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் அன்புநன்றிகள். இன்றுமுதல் என் மனம் கவர் பதிவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகிறேன்.


முதல் அறிமுகம்


என்னால் அண்ணா என அன்புடன் அழைக்கப்பட்டுவருபவரும்மற்ற சிலரால்  ”VGK”என்றும்வேறு சிலரால் பதிவுலக வை.கோ” என்றும்ஒருசிலரால் செல்லமாககோபு” என்றும் அழைக்கப்பட்டுவரும் பதிவர்  வை. கோபாலகிருஷ்ணன் அவர்களை வலையுலகில் தெரியாதவர்களே இருக்க முடியாது.  



வை. கோபாலகிருஷ்ணன்
வை.கோ *
கோபு *
* VGK *




இவர் பல்வேறு தனித்திறமைகளைத் தன்னிடத்திலே வளர்த்துக்கொண்டுகுடத்திலிட்ட விளக்காகத் திகழ்ந்து கொண்டுஅன்பு,  அடக்கம்,  அமைதிஅனுபவம் என்ற மிகச்சிறப்பான குணங்களைத் தன்னகத்தே தக்க வைத்துக்கொண்டுஎப்போதும் தன்னை மிகச் சாதாரணமானவன் தான் ஆனாலும் ஏதாவது சாதிக்க நினைப்பவன் என்று சொல்லி வருகிறார்.

இவர் இதுவரை செய்துள்ள சாதனைகளே,  ஏராளமாகவும்,  தாராளமாகவும் உள்ளன.

தற்சமயம் குவைத்திலிருக்கும் நான்இந்தியாவில் தமிழ்நாட்டில்  திருச்சியிலிருக்கும் என் அண்ணா திரு. வை. கோபாலகிருஷ்ணனுடன்சமீபத்தில்  தொலைபேசியில் பேசி இருக்கிறேன். அவரின் பலவிதமான சாதனைகளை ஆச்சர்யத்துடன் கேட்டிருக்கிறேன் 

இவரைப்போன்ற ஒரு நல்ல மனம் படைத்தவரைநல்லதை மட்டுமே நினைப்பவரைபல்வேறு திறமைகள் கொண்டவரைநகைச்சுவை உணர்வுகள் நிரம்பியவரை நான் இதுவரைப் பார்த்ததே இல்லை. 


எழுத்தினில் எழுதி எடுத்துரைத்துப் புரிய வைக்க முடியாத பல்வேறு நல்ல விஷயங்கள் நான் இவரிடம் பேசியதில் என்னால் நன்கு அறிய முடிந்தது. பிராப்தம் இருந்தால் நான் இவரை நேரில் சந்திப்பேன்.

இவரின் பதிவுலக எழுத்துக்களில் இவர் தொடாத தலைப்புக்களே இல்லை என்றும் சொல்லலாம்.  

நட்புமனிதநேயம்அனுபவம்காதல்மனித உணர்வுகள்மனிதாபிமானம்வாழ்வியல் யதார்த்தங்கள்உண்மைநேர்மைகுடும்ப உறவுகள் போன்ற அனைத்து அம்சங்களும்  இவரின் பல்வேறு படைப்புகளில் இவர் கையாண்டுள்ளார். 

மேலும் இவரின் படைப்புகள்  எல்லாவற்றிலும் நகைச்சுவை கலந்து கொடுப்பதிலும்சொல்லுவதை மிகத் தெளிவாக தகுந்த உதாரணங்களுடன் சொல்லுவதிலும் இவர் வல்லவராகவே உள்ளார். 

என் பேட்டியில் முக்கியமாக அவரின் படைப்புகளைப்பற்றி பேசியபோது நான் சேகரித்த சில விஷயங்களைப்பற்றி மட்டும் இங்கு இன்று விஸ்தாரமாக எடுத்துரைத்து அறிமுகப்படுத்த விரும்புகிறேன். 

oooooooooooooo

தாயுமானவள்” பகுதி 1 / 3

அன்புக்குரிய கோபு அண்ணா எழுதிய முதல் சிறுகதை இது.

முதல் சிறுகதையே பிரபல பத்திரிகையின் சிறுகதைப் போட்டியொன்றில் பரிசுக்கு தேர்வாகியுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். 

முதல் சந்திப்புமுதல் பார்வைமுதல் நட்புமுதல் உரையாடல்முதல் காதல்முதல் குழந்தை போன்றவற்றில் தானே ஒரு THRILLING  ஆன அனுபவமும்சுகமும்பேரானந்தமும்பரவஸமும்  இருக்க முடியும்?

அதுபோலவே தான் இந்த என் முதல் கதையும்அது முதன் முதலாக ஒரு பிரபல பத்திரிகையில் அச்சேறிபிரசுரம் ஆனபோதுஎனக்கு மட்டில்லா மகிழ்ச்சியையும்பரிசுத் தொகையையும்என்னுடன் அன்று மிகப்பெரிய தொழிற்சாலையில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களின் ஆத்மார்த்தமான பாராட்டுக்களையும்புதிய எழுத்துலக நண்பர்களையும் பெற்றுத்தந்தது என்பதே என் சிறுகதையின் மூலம் நான் பெற்ற மிகச்சிறப்பானமகிழ்ச்சிகரமானதோர் அனுபவம்.

அந்த என் முதல் அனுபவம் மிகவும் 
THRILLING! THRILLING!! THRILLING!!! தான் !”  

என்கிறார்என் அன்புக்குரிய திரு.வை.கோபாலகிருஷ்ணன் அண்ணா. 

[சுனாமி என்ற இயற்கையின் சீற்றத்தால் தன் பெற்றோர்களை இழந்து ஆதரவற்ற அனாதையான ஓர் சிறுமியைப் பற்றிய கதைஇது. நெஞ்சை உருக்கும் சம்பவங்களை மிகவும் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் ]

===========================================================

உடம்பெல்லாம் உப்புச்சீடை

மிகவும் அருமையானதோர் காவியம்.  

தமிழின் பிரபல  மாத பத்திரிகையான மங்கையர் மலர்”  மட்டுமின்றி இந்தக்கதைதமிழ் மொழியும்  தெரிந்த  கன்னட எழுத்தாளர் ஒருவரால் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுபெங்களூரிலிருந்து வெளிவரும் பிரபல கன்னடப் பத்திரிகையான கஸ்தூரி யிலும் வெளியாகியுள்ளது. 

அந்த கன்னட மொழியாக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தக்கதையின் தலைப்பு: ”மையெல்லாக் கண்டு” 

இரயில் பயணத்தில் துவங்கும் இந்தக்கதைஒவ்வொரு பகுதியிலும் நம்மையும் சுகமாக தாலாட்டி அதே ரயில் வண்டியில்  கூட்டிச் செல்கிறது. 

கதையில் எக்ஸ்ப்ரஸ் வேகம். நல்ல விறுவிறுப்பு. 

கதாசிரியரின் முழுத்திறமையும் ஒவ்வொரு வரிகளிலும் மிளிர்கின்றனஒளிர்கின்றன. 

மிகச் சிறந்ததோர் படைப்பு. அனைவராலும் ஒருமனதாகப் பாராட்டப்பட்டுள்ளது. 

======================================   

அஞ்சலை”  பகுதி 1 / 6

உலகளாவிய தமிழ் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்ட இந்தக்கதைக்கு லண்டனிலிருந்து வெளிவரும் புதினம்” என்ற பத்திரிகையால் பரிசளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது. 

கதையென்றால் இதுவல்லவோ கதை’ என்று சொல்லும் அளவுக்கு நல்ல விறுவிறுப்பான நடையுடன்மனித உணர்வுகளைப் பற்றிச் சொல்லும்மிக  அற்புதமான கதை இது.

=======================================================

என் உயிர்த்தோழி

ஒரு பிரபல தமிழ் வாரப் பத்திரிகை நடத்திய  படக்கதை” க்கான  போட்டியில் ஒருவருக்கே பரிசு என்ற நிபந்தனையில்அந்தப்பரிசினை தனக்கே தட்டிச்சென்ற கதை இது.

இதில் அன்புபாசம்பிரியம்உறவு போன்றவை வெகு அழகாக விளக்கப்பட்டுள்ளன.

===========================================

இனி துயரம் இல்லை

தமிழ் மாதச் சிற்றிதழ் ஒன்று நடத்திய போட்டியொன்றில் முதல் பரிசு பெற்ற கதை இது.

முதியோரின் மன உணர்வுகளை அருமையாக அற்புதமாக இளைஞர்கள் அறிந்து கொள்ளுமாறு செய்த மிகச்சிறந்த கதை.

======================================================

ப வ ழ ம்

நிலாச்சாரல்’ என்ற மின் இதழில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வெளியிடப்பட்ட ஆயிரக்கணக்கான  கதைகளிலுமே மிகச்சிறப்பானது இந்தக் கதை என தெர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது இந்தச் சிறுகதை.

=================================================================================

தீபாவளி நேரத்தில் பத்தாயிரம் வாலா பட்டாசு என சர வெடி வெடிக்கும் .......  பார்த்திருப்பீர்கள் தானே!

அதே போன்ற சரவெடியாகதாங்களும் வாய்விட்டுச்  சிரித்துக்கொண்டே இருக்க விருப்பமா

இதோ என் கோபு அண்ணாவின் இந்த மூன்று கதைகளையும் வாசியுங்கோ .... 

சிரித்துச் சிரித்து வயிற்றுவலி ஏற்பட்டால் மஞ்சுவாகிய நான் பொறுப்பல்ல! ;)))))  

==============

எலிஸபத் டவர்ஸ் [பகுதி 1 / 8]

அடுக்குமாடிக் குடிருப்பில் வீடாம். வீட்டினில் ஓர் எலி புகுந்து விட்டதாம். அந்த வீட்டில் உள்ளவர்கள் படும் பாட்டை முழு நீள நகைச்சுவையாகத் தந்திருக்கிறார் ...... நம் கோபு அண்ணா. 

இதில் வேடிக்கை என்னவென்றால் முதல் ஏழு பகுதிகள் வரை எலியை நம் கண்ணில் காட்டாமலேயே மிக ரகசியமாகவே ஓட விட்டுள்ளார் கதாசிரியர். 

சிரிப்போ சிரிப்பு தான். திகில் கதை போலஅதே சமயம் நகைச்சுவை குறையாமல்மிக  அற்புதமாக எழுதியுள்ளார்..

===================

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?”  பகுதி-1 / 2

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் மட்டுமே தெரியும் என்பார்கள். 

அப்போ பல் வலி வந்தால் மட்டும் பக்கத்து வீட்டுக்காரனுக்கா தெரியும்எனக்கேட்டு கதையை ஆரம்பித்துள்ளார் என் அண்ணா VGK. 

படித்துச் சிரித்ததில் என் பல்லெல்லாம் சுளுக்கிக் கொண்டு விட்டது.  அவ்வளவு நகைச்சுவை. 

தனக்கே உரித்தான வெகு சரளமான நடையில்  எழுதியுள்ளார்.

கடைசியில் இவரால் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சில அறிவுரைகளோ ...  
அடடா .. அக்ஷர லக்ஷம் பெறும்.  

இந்த அருமையான கதையை எழுதிய கோபு அண்ணா 
பல்லாண்டு வாழ்க !!!

=============

வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ.! 
புதிய கட்சி மூ.பொ.போ.மு.க.” 
உதயம்: பகுதி 1 / 8

சென்ற ஆண்டு 2011 ஆரம்பத்தில்தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு  சற்று முன் இந்தக் கதையைக் கொடுத்துள்ளது,  அண்ணா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின் தனிச்சிறப்பு.

அருமையானதோர் நகைச்சுவை சரவெடியினை கொளுத்திவிட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார். 

அரசியல் மட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்களைச் சேர்த்துச் சமைத்த ஓர் ருசியான அவியல் இது.

தமிழக அரசியலில் ஏற்கனவே உலா வரும் முன்னேற்றக் கழகங்கள் போதாதென்று இவர் ஓர் மூ.பொ.போ.மு.க” என்று  ஓர் புதிய கட்சி உதயம் என்கிறார். 

அலுவலகத்தில்அலுவலக நேரத்தில்வேலை செய்கிறார்களோ இல்லையோவெட்டி அரட்டை அடிப்பதே சிலரின் வழக்கம். அந்தக் கருவினை அழகாகக் கையில் எடுத்துக்கொண்டு,  மிக மிக சுவைபட எழுதி அசத்தியுள்ளார்நம் கோபு அண்ணா. 

முதல் பகுதியை படிக்க ஆரம்பித்தால் கடைசி வரை படித்து முடிக்காமல் யாரும் அங்கே இங்கே செல்லவே முடியாதபடி, தன் கதைகளை நகைச்சுவையாக நகர்த்திச் சொல்வதில், என் கோபு அண்ணா அவர்களுக்கு நிகர் அவரே தான் என்பேன்.

oooooooooooooooooooooooooooooooo   

பொறுமையாக நீண்ட நேரம் செலவழித்து கதைகளைப் படிக்க முடியாது. 

ஏதோ ஒரு ஐந்து நிமிடம் மட்டுமே உள்ளது. அதற்குள் ஒரு கதையைப் படிக்க வேண்டும். குபீரெனச் சிரிக்க வேண்டும். கவலைகளை மறக்க வேண்டும் 

என விரும்புவோர்களுக்காக மட்டுமே,  என் கோபு அண்ணா குட்டியூண்டு கதைகள்” நிறையவே எழுதியுள்ளார். 

இதோ இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். 

சரவெடி அல்ல;  இவை மிகச்சிறிய ஒரே வெடிதான்;  
ஆனாலும் ஒவ்வொன்றும் ஓர் அணுகுண்டு போல! 
ஜாக்கிரதை!! ;))))) 


பிரமோஷன்


வாய்விட்டுச்சிரித்தால் 

சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி]


பெயர் சூட்டல்

வரம்

யார் முட்டாள்?

அமுதைப்பொழியும் நிலவே !

திருமண மலைகளும் மாலைகளும்

கொட்டாவி

எட்டாக்க[ன்]னிகள்

முன்னெச்சரிக்கை முகுந்தன்

கார் கடத்தல்

தங்கமே தங்கம்

பகற்கொள்ளை

ஐக்யூ டாப்லெட்ஸ்  [I Q TABLETS]

விருது மழையில் தூறியதோர் குட்டிக்கதை.
புத்திசாலி மனைவியைப் பற்றிய நகைச்சுவைக் கதை ]

தாலி” 

ஆசை

===========================================

அண்ணா எழுதிய கற்கண்டாக 
இனிக்கும் [திகட்டாத] அற்புதமான கதைகள் இதோ: 

மறக்க மனம் கூடுதில்லையே பகுதி 1 / 4

ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்

காதல் வங்கி

மனசுக்குள் மத்தாப்பூ பகுதி 1 / 4
[என் கோபு அண்ணா அவர்கள் தானே வரைந்த 
ஓவியத்துடன் கூடிய காதல் காவியம் இது.] 

ஜா தி ப் பூ

காதலாவது .... கத்தரிக்காயாவது!!

மலரே குறிஞ்சி மலரே பகுதி 1 / 3

கொஞ்ச நாள் பொறு தலைவா ...!
ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா .....!!

தேடிவந்த தேவதை பகுதி 1 / 5

================================================


அன்பின் VGK அண்ணா அவர்கள் எழுதியுள்ள
சமூக விழிப்புணர்வுக் கதைகள். 

மனித நேயம்மனிதாபிமானம்உண்மைநேர்மை
என மிகச்சிறப்பான குணங்களைப்பற்றி,  சிந்திக்க 
வைக்கும் அற்புதமான படைப்புகளில் ஒருசில:

ஜாங்கிரி

எல்லோருக்கும் பெய்யும் மழை

பூபாலன்

நாவினால் சுட்ட வடு பகுதி 1 / 2

அவன் போட்ட கணக்கு

எங்கெங்கும் எப்போதும் என்னோடு பகுதி 1/ 3

மூக்குத்தி பகுதி 1 / 7

யாதும் ஊரே!  யாவரும் கேளிர்!!

வடிகால் பகுதி 1 / 4

மடிசார் புடவை பகுதி 1 / 2

பஜ்ஜீன்னா பஜ்ஜி தான் பகுதி 1 / 2

முதிர்ந்த பார்வை பகுதி 1 / 2

அழைப்பு பகுதி 1 / 2

அட்டெண்டர் ஆறுமுகம் 

சகுனம் பகுதி 1 / 2

பிரார்த்தனை

அழகு நிலயம்

நல்ல காலம் பிறக்குது

மாமியார்

உண்மை சற்றே வெண்மை பகுதி 1 / 2

நகரப்பேருந்தில் ஓர் கிழவி

தை வெள்ளிக்கிழமை

நன்றே செய் அதுவும் இன்றே செய்

சூழ்நிலை

அழகு நிலையம்

அன்ன்மிட்ட கைகள்

முதிர்ந்த பார்வை பகுதி 1 / 2 

ஏமாற்றாதே ஏமாறாதே

===================================================================

தங்கப்பதக்கத்தின் மேலே ஓர் முத்துப்பதித்தது போலே
கோபு அண்ணாவின் சொந்த அனுபவங்களால் 
வெளிப்பட்டுள்ள அழகான வைரம் போல மின்னும் 
படைப்புகள் நிறையவே காணப்படுகின்றன. 

இதோ அவற்றில் சில:   

சுடிதார் வாங்கப்போறேன்  பகுதி 1 / 3

நீ முன்னாலே போனா ... நா .. 
பின்னாலே வாரேன் பகுதி 1 / 5

மழலைகள் உலகம் மகத்தானது

உணவே வா ... உயிரே போ  [கட்டுரை]

ஜான்பேட்டா” - கேரக்டர் பகுதி 1 / 2

பிரபல சங்கீத உபன்யாசகர் திருமதி விசாஹா ஹரி 
அவர்களுடன் ..... சுகமான அனுபவம்.  பகுதி 1 / 2

காலம் மாறிப்போச்சு பகுதி 1 / 2

மீண்டும் பள்ளிக்குப்போகலாம் பகுதி 1 / 7

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் பகுதி 1 / 18

ஊரைச் சொல்லவா! பேரைச் சொல்லவா!! 
[திருச்சியைப் பற்றிய விரிவான கட்டுரை]

பெயர் காரணம் [நகைச்சுவை ஆனால் உண்மை]

ஐம்பதாவது பிரஸவம் 
[”மை டியர் ப்ளாக்கி” + குட்டிக்குழந்தை தாலி”]

100 ஆவது பதிவு - இந்த நாள் இனிய நாள் 

150 ஆவது பதிவு [தீபாவளி குறு நாவல்-முடிவு]

200 ஆவது பதிவு 
நான் ஏறி வந்த ஏணி தோணி கோணி

250 ஆவது பதிவு [ஸ்ரீ கிருஷ்ணர் பற்றி]

300 ஆவது பதிவு
ஆதி சங்கரரின் வாக்கு [நாடகப்பகுதி 17]

===========================================

கோபு அண்ணா எழுதியுள்ள ஒரு சில கவிதைகள்

அந்த நாளும் வந்திடாதோ [கவிதை]

உனக்கே உனக்காக [கவிதை]
==========================================

VGK அண்ணா அவர்கள் தன்னுடைய இல்லற வாழ்க்கை, [மணிவிழாமனைவிபிள்ளைகள்மருமகள்கள்பேரன்கள்பேத்தி]அலுவலக வாழ்க்கைஎழுத்துலகப் ப்ரவேசம்வெளியிட்டுள்ள நூல்கள்வெளிநாட்டுப்பயணம்,  அவரின் ஆர்வங்கள்தனித்திறமைகள்இதுவரை அவர் பெற்றுள்ள பரிசுகள்,  விருதுகள்பட்டங்கள்தேசிய விருதுகள் என 


பல்வேறு “மலரும் நினைவுகளை அழகான படங்களாக வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நான் மிகவும் வியந்தும் மகிழ்ந்தும் போனேன். 

இதோ அதற்கான இணைப்புகள்:

நல்லதொரு குடும்பம் 

அலுவலக நாட்கள்

என்னை வரவேற்ற எழுத்துலகம்

நூல்கள் பெற்றுத்தந்த பரிசுகள்

துபாய்ப் பயணம்

கலைகளிலே அவள் ஓவியம்

==========================================


இங்கு நான் இவரைப்பற்றி குறிப்பிட்டுள்ளவற்றைத் தவிர இன்னும் பல சிறப்பான பதிவுகள் கொடுத்துள்ளார். அதாவது ஆன்மிகம்மூளைக்கு வேலை,  தந்திரக் கணக்குகள்,  ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஒருசில சிறுகதைகள்ஜோக்குகள்விசித்திரமான ஓவியங்கள் என ஏராளமாக உள்ளன.

சென்ற ஆண்டு அதாவது 2011 ஜனவரி முதல் டிஸம்பர் வரை மட்டும் சுமார் 200 பதிவுகள் கொடுத்துள்ள இவர் இந்த 2012 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு 100 பதிவுகளுக்கு மேல் கொடுத்து விட்டுசற்றே வலையுலகிலிருந்துவிலகியுள்ளது போலத்தெரிகிறது.  

அதற்கான காரணத்தை ஏதோ இக்கட்டான சூழ்நிலை என்று இவர் தன்னுடைய   2012 மே மாதப் பதிவினில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவருடன் நான் பேசிப் பழகியதிலிருந்துஇவர் நம்முடன் பகிர்ந்து கொள்ள இன்னும் ஆயிரக்கணக்கான சுவையான விஷய்ங்கள் இருக்கும் என்பதை நன்கு உணர முடிந்தது. 

நல்லதொரு கற்பனை வளமும்அழகான எழுத்து நடையும்மிகச்சிறந்த அனுபவ முதிர்ச்சியும் உள்ள இவர் மீண்டும் பதிவுலகத்திற்கு தொடர்ச்சியாக வருகை தந்துமேலும் பல சிறப்பான பதிவுகளைத் தரவேண்டும் என உங்கள் அனைவர் சார்பாகவும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

இவருடைய சமீபத்திய ஒருசில பதிவுகள் மூலம் இவரின் நட்பு வட்டம் எவ்வளவு மிகப் பெரியது என்பதை நாம் நன்கு அறிய முடிகிறது. தனக்குக் கிடைத்த 10th  11th +  12th விருதுகள் ஒவ்வொன்றையும் இவர் 108 பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டு மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளார். 

அதற்கான இணைப்புகள் இதோ:





இவரின் பதிவுக்கு வருகை புரிந்து பின்னூட்டம் தரும் ஏராளமானவர்களையும்அவர்களின் மிகச்சிறந்த கருத்துக்களையும்அவற்றிற்கு இவர் தரும் பதில்களையும் படித்தாலே மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. அந்த அளவுக்கு இவர்மேல் பலரும் பாசமழையினைப் பொழிகிறார்கள் என்றால்இவர் சொல்வது போல இவர் சாதாரணமானவராகவே இருக்க முடியாது.






அன்பின் கோபு அண்ணா!

தாங்கள் அவசியமாக மீண்டும் பதிவுகள் எழுதி எங்களை மகிழ்விக்க  வேண்டும் என மிகத்தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
உங்களின் அன்புத்தங்கை

ம ஞ் சு பா ஷி ணி


இந்தப் பதிவினைப் பார்க்கும் படிக்கும் அன்பர்கள்நண்பர்கள்பதிவர்கள் அனைவருக்கும் ஓர் மிகசிறிய வேண்டுகோள்

மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இணைப்புகளில் தங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒன்றினைப் போய்ப் படியுங்கள். தங்களின் கருத்துக்களை பதிவு செய்து பின்னூட்டம் அளியுங்கள். அதுவே என் அன்பின் அண்ணா திரு. VGK அவர்களை மிகவும் மகிழ்விக்கும். அவருக்கு உற்சாகமும் அளிக்கும். 

அதுபோன்ற தங்களின் கருத்துக்களும்பாராட்டுக்களும் மட்டுமே அவரை திரும்ப உற்சாகத்துடன் நம் வலையுலகில் வலம் வர வழிவகுக்கும்.

செய்வீர்கள் தானே? ........ 

மீண்டும் நாளை மனம் கவர் பதிவர்களுடன் சந்திக்கிறேன்பா உங்களை....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...