"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, October 6, 2012

வலைச்சரம் - கோபம் - ஆறாம் நாள்

வலைச்சரம் - கோபம் - ஆறாம் நாள்


SATURDAY, OCTOBER 6, 2012


கோபம் - கதம்ப உணர்வுகள் ( ஆறாம் நாள்)


கோபம்…. நம் முன்னேற்றத்துக்கு முதல் தடைக்கல்…. நம்மிடமிருந்து நம் நட்பை பிரிக்கும் எதிரி…. நம் நல்ல குணங்களை எல்லாம் பின் தள்ளிவிடும் அபாயம்… நம் உடல்நலத்தை கெடுக்கும் நோய்…
கெட்டகோபம் வந்துரும் ஆமா சொல்லிட்டேன்... கோபத்தில் நல்ல கோபம் கெட்ட கோபம் எதுவும் இல்லை. கோபத்தினால் நஷ்டங்கள் மட்டுமே ஏற்படுவதுண்டு.

கோபத்தை கட்டுப்படுத்தினாலோ…. அது இன்னும் கொடியது…. கோபம் அந்த ஷணம் அடக்கினாலும் அது நீறுபூத்த நெருப்பாய் மனதில் வன்மத்தை பெருக்கும்…. பிபி அதிகரிக்கும்…. உடல்நலம் மோசமாகும்.

ஷண நேர கோபத்தினால் கொலைகளும் நிகழ்ந்ததுண்டு. பின் சிறையில் தன் செயலுக்கு வருந்தியவரும் உண்டு… கோபம் வரும்போது கோபம் ஏற்படுத்தியவரிடம் இருந்து நகர்ந்துவிடுங்கள்.

கட்டுப்படுத்தும் கோபம் என்றாவது எதிர்ப்பார்க்காத நேரத்தில் நம்மையே அறியாமல் ஒருவர் மேலிருக்கும் கோபம் இன்னொருவர் மேல் திரும்பும்… அதுவும் அடக்கிவைக்கப்பட்ட கோபம் இருக்கிறதே அது அடக்கி வைத்து வைத்து அடக்கமுடியாத சூழ்நிலையில் சீற்றம் அதிகமாகி எதிராளியின் மனதை காயப்படுத்திவிடும்…

கோபத்தில் சிதறப்படும் வார்த்தைகளின் வீரியம் கொடியது. நல்ல உறவை சிதைத்துவிடும். நல்ல நட்பை பிரித்துவிடும்…. கோபத்தினால் சாதிக்கப்போவது ஒன்றுமே இல்லை.. கோபத்தில் இன்று நாம் வார்த்தைகள் உமிழ்ந்துவிட்டு பின்னொரு நாளில் அவரை நேருக்கு நேர் காணும்போது நாம் உதிர்த்த வார்த்தைகள் அவர் மறந்திருந்தாலும் நமக்கு நினைவுக்கு வந்து தர்மசங்கடமான ஒரு நிலை ஏற்பட்டு சிரிக்கவும் முடியாமல் இக்கட்டு ஏற்படும்...

கோபத்தினால் ஏற்படும் நம் உடலில் அசௌகரியங்களை இங்க குவைத்ல பிஸ்வரூப் ராய் சௌத்ரி அப்டின்னு ஒருத்தர் மைண்ட் பாடி பேலன்ஸ்ட் செமினார் எடுத்தார். அப்ப சொன்னார் கோபம், ஸ்ட்ரெஸ், டென்ஷன், அதீத வெறுப்பு இதனால் நமக்கே தெரியாம நம் உடலில் வயிற்றின் உள் மென்மையான சுவற்றில் ரத்தக்கசிவு ஏற்படுகிறதாம்.

உடலையும் மனதையும் சாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள்….உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். இன்னொரு நல்லதும் இருக்கிறது. கோபப்படுவதால் முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகி சீக்கிரமே முதுமை வந்துவிடுமாம் அவசியமா சொல்லுங்க? என்றும் இளமையா இருக்கறதுக்கு கோபத்தை தவிர்த்துடுங்களேன்….இவ்ளோ சொல்றீங்க.. சொல்றது எளிது தான். ஆனால் செயல்படுத்துவது தான் சிரமம்னு நீங்க சொல்றது எனக்கு கேட்கிறது… முயன்றால் முடியாததுன்னு எதுவுமே இல்லை தானே. நான் முயல்கிறேன் அப்ப நீங்க?? 

சரி இன்று எனக்கு மிகவும் பிடித்த மனம் கவர் பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன் வாங்கப்பா…



இது எங்க வீட்டுப்பிள்ளை அப்டின்னு இவர் பதிவுகள் சொல்லவைக்கும் இவருடைய எங்கள் பிளாக். எங்க வீட்டுக்கு வாங்க என்று அன்புடன் வரவேற்று உபசரிக்கும் அன்பும் பண்பும் உள்ள அருமையான குணம் கொண்ட இந்தப்பிள்ளையின் பெயருக்கேற்றார்போலவே பதிவுகளை படிக்கும்போதெல்லாம் எனக்கு எப்பவும் தோணும்... எத்தனை வாதஸல்யம்.. எத்தனை அன்பு, பண்பு இந்தப்பிள்ளைக்கு... பார்ப்போமா இவரின் சில பதிவுகளை?






ஒருவரைப்பற்றி அறிய எத்தனை நாட்களோ மாதங்களோ அவசியம் இல்லை. அவரின் ஒரு வரி எழுத்து அவரின் மனதை அவரின் இயல்பை அவரின் குணத்தை மிக அழகாய் பிரதிபலிக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு எனக்கு மிகவும் பிடித்த சுப்புரத்தினம் சிவா ஐயாவின் என் முதல் வலைச்சரம் நாளுக்கான இவர் பின்னூட்டம் தான். ஆச்சர்யத்துடன் இவர் வலைப்பூவில் தொடர்ந்தேன்... சென்று கண்டபோது ஆச்சர்யமாக பிரமித்தேன். பிற வலைதளங்களில் இருக்கும் நல்லவைகள் எல்லாம் தொகுப்பாக இவர் வைத்திருக்கும் பாங்கு ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தது... என் கவிதை வரிகளை என்னிடம் அனுமதி கேட்டு அதை பாடலாக பாடி அனுப்பி இருக்கிறார். என்னை விட அதிக வயது. ஆனால் அவர் வார்த்தைகளில் எத்தனை பணிவு.... இவரின் வலைப்பூவில் எனக்கு பிடித்த பதிவை பார்ப்போமா?






இந்தச்சகோதரரின் கவிதைகள் படிக்கும்போதும் சரி இவரின் கதைகளை படிக்கும்போதும் சரி அந்த தாக்கம் கண்டிப்பாக நமக்கும் ஏற்படும். இவர் படைப்புகள் எளிய நடையில் கருத்துகள் சொல்லும்... இவரின் பதிவுகள் சில பார்ப்போமா?







மனம் ரொம்ப சோகமாக இருக்கும்போது இவர் வலைப்பூவுக்கு சென்று பாருங்க. சோகமெல்லாம் சட்டுனு மறைந்து வயிற்றுவலி வந்துவிடும். எப்படியா? சிரித்து சிரித்து தான்.... இவர் தன் அனுபவங்களையே வாசகர்கள் படித்து சிரித்து மகிழும்படி ரசிக்கும்படி தருகிறவர்... பார்ப்போமா இவரின் சில பதிவுகளை?







இந்த இனியப்பெண் எனக்கு மிகவும் இஷ்டமான குழந்தை. ஹேமாவிடம் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தால் போதும் இவள் மனதின் சந்தோஷமும் சிரிப்பும் நம்மையும் தொற்றிக்கொள்ளும். இந்த இயல்பான மனதுடைய இந்தக்குழந்தையின் கவிதைகளின் ரசிகை நான்... பார்ப்போமா இந்த மௌனத்தின் ஓசையைக்கொஞ்சம்?


உனக்கான ஒரு கவிதையோடு




இது என் செல்லக்குழந்தையின் வலைப்பூ. சிரித்துக்கொண்டே இருப்பாள். சிரிக்கவும் வைப்பாள். மனதில் என்றும் அன்பை மட்டுமே நிறைத்து வைத்திருக்கும் இந்தக்குழந்தை நான் இந்தியாவுக்கு சென்றபோது தினம் தவறாமல் என் நலம் விசாரித்த இந்த அன்புக்குழந்தையின் வலைப்பூவில் இருந்து அன்பு பதிவுகள் சிலவற்றை பார்ப்போமா?



செய்தாலியின் கவிதைகள் 


அன்பும், பண்பும், அறிவும், நல்லொழுக்கமும், அநியாயத்தைக்கூட தன் கவிதை வரிகளில் மல்லிகைப்பூ தீண்டலாகவே யாரையும் துன்புறுத்தாது தன் கவிதைகளில் மெல்லியத் தென்றலாக வரிகள் அமைக்கும் இவர் பதிவுகள் சில பார்ப்போமா?

மன அறை ஒழுங்கீனம் 

கடவுள் பொம்மை

கருணை தர்மங்கள்

 




இனிய நண்பராக அறிமுகமாகி அன்புச்சகோதரனாக நிலைத்தவர். இவரின் கவிதைகளின் ரசிகை நான். சொல்ல வந்த கருத்தை இரண்டே வரிகளில் நச் என்று சொல்லிச்செல்வார்.... எளியநடை.... சமூகம், அரசியல், காதல், அன்பு, நட்பு எல்லா கவிதைகளிலும் சின்னக்கவிதையில் சொல்லிவிடுவார் சொல்லவந்ததை. பார்ப்போமா சில பதிவுகளை?








இந்த அற்புதமான மனிதரின் பதிவுகளில் மனிதநேயம் கண்டேன். அழகிய ஓவியத்திறமையையும் கண்டேன். அழகிய காதல் கவிதைகளையும் கண்டேன். நல்ல அனுபவங்களையும் கண்டேன். வயதில் சிறியவரானாலும் மருத்துவத்துறையில் புகழ் பெற்றிருந்தாலும் அடக்கமும், அமைதியும், அன்பும் மனநிறைவோடு கண்டேன். இவரை அன்புடன் வாழ்த்திவிட்டு பார்ப்போமா இவரின் சில பதிவுகளை?

நிவேதா முதல் நிவேதா வரை 



இவர் பதிவுகளில், இயல்பில் எப்போதும் எல்லோரையும் சிரிக்கவைக்கும் அற்புதமான ஆற்றல் பெற்றவர். எல்லோரிடமும் இயல்பாக எதார்த்தமாக பழகி யார் மனமும் புண்படாமல் நகைச்சுவை புரிந்து சிரிக்கவைப்பதில் வல்லவர். பதிவர் மாநாட்டில் இவர் செய்த ரகளை இப்போது நினைத்தாலும் நான் ரசித்து சிரிப்பதுண்டு.. பார்ப்போமா இவரின் சில பதிவுகளை?

பாரதி கண்ட புதுமைப்பெண் இவள் தானா? 





பெயருக்கேற்றார்போலவே இவர் வலைப்பூ சென்று பார்த்தால் நாம் இதுவரை அறியாத எத்தனையோ நல்ல விஷயங்களை அறியலாம்... ஆச்சர்யமாக இருந்தது. சுவாரஸ்யமான தகவல் பேழை இந்த வலைப்பூ.... பார்ப்போமா இவரின் சில பதிவுகளை?

தொப்பையை தடுக்கும் வழி 






கோமதி மேடம் இவர்களை நான் வலைச்சரத்தில் தான் முதன் 
முதல் அறிய நேர்ந்தது. இவர்களின் வலைப்பூ சென்றால் இவரின் 
மனதைப்போலவே வாத்ஸல்யமான தாயன்பை, நல்ல மனதை 
இவர் பதிவுகளில் காணமுடிந்தது.

பார்ப்போமா இந்த அன்பு உள்ளத்தின் பதிவுகள் சில?




அதிகம் இவரை அறிந்ததில்லை. ஆனால் கேரளாக்காரர் இத்தனை
அருமையாக தமிழை விரும்பி ரசித்து பதிவுகள் தருகிறாரே என்று 
இவருடைய வலைப்பூவுக்கு சென்றபோது மிக அருமையான மூன்று
பதிவுகள் கண்டேன். அதை உங்களுடன் இதோ பகிர்ந்து இருக்கிறேன். 




இன்றைய நாள் எல்லோருக்கும் மகிழ்ச்சியை மட்டுமே தரட்டும் என்று 
வேண்டிக்கொள்கிறேன். மீண்டும் நாளை சந்திப்போமா 
அன்புள்ளங்களே?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...