"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, July 12, 2010

கூசிடாது வாங்கும் லஞ்சம்....

காசுகொடுக்காமல் வேலை நடக்க
இந்தியத்தாத்தா நடமாடவில்லையே

காசுகொடுத்தாலாவது வேலை நடக்க
கைக்கட்டி வரிசையில் நிற்கையிலேயே

குறைகளை சுட்டிக்காட்டி ஒதுக்கித்தள்ளி
போய்வா மற்றொருநாள் பார்க்கலாம்

அசட்டையான பதிலும் காவியேறிய பற்களும்
கறைபடியாத கையும் இல்லை காப்பாற்ற நாதியுமில்லை

லஞ்சத்தின் பிறப்பு திருட்டுத்தனமாய் தொடங்கி
தொடர்ந்து கொண்டாடும் பகிங்கர விழாவாகிவிட்டது

உழைத்தவர்களின் வயிறுகட்டி வாய்க்கட்டி
உண்டுகளிப்பவர்களின் கையில் கொட்டி

இன்னமும் வேலை நடக்கவில்லை ஐயா...
நெஞ்சுபொறுக்குதில்லையே ஐயா....

இந்தியனே வெட்கப்படும் கேட்டினை
கேட்டு கண்டிக்க ஆளே இல்லையா?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...