"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, August 28, 2010

நினைவுகள் நிஜங்களாகுமா....

நினைவுகள் வாழவைக்கும்
நினைவுகள் நிஜமாகுமா
முடிந்த நிமிடங்கள்
கழித்த காலங்கள்
பேசி சிரித்த தருணங்கள்
வாழவைக்கும்
தொலைத்தவை திருப்பி தருமா?

என் கனவுகள் கற்பனைகள்
எல்லாம் உன்னுடனே
என் மனம் நிறைந்த காதலும்
உன்னுடனே
உன் நினைவுகள் என்றும்
என்னுடனே

உன்னுடன் சந்தோஷித்த
தருணங்கள் என்னுடனே
உன் நினைவுகள்
என்னோடு இன்றும்

உன்னை அடைய
நினைக்கும் நினைவுகள்
நிஜமாகுமா பெண்ணே
உன் மடியில் தலை சாய்க்கும்
அந்த அற்புத நொடிகள்
எனக்கு கிடைக்குமா கண்ணே

என் கண்ணீர் உன் தோள்
நனைக்குமா கண்ணே
உன்னை நினைக்கும்
உன்னுடனே வாழ துடிக்கும்
அந்த எண்ணங்கள்
உன்னோடு சேர்த்து வைக்குமா

இறைவன் என்னோடு
உன் நினைவுகள் என்னோடு
இறைவன் ஆசியோடு
பொய்க்காத நம்பிக்கையோடு
நினைவுகளும் ஆகும் நிஜங்கள்
அதுவும் என்னோடே

நம்பிக்கை காதல்
பொய்ப்பதில்லை என்றும்
எதுவும் சாத்தியமே
இதுவும் சத்தியமே…

பார்த்த தருணங்கள்.....

பார்த்த தருணங்கள் மனம் நிறைத்திருக்க
காணாத பொழுதுகள் கண்கள் நிறைந்திருக்க
தனிமை வாட்டும் நிமிடங்கள் கனத்திருக்க
நினைவுகள் மட்டும் பின்னோக்கி சென்றிருக்க

தவிப்பும் துடிப்பும் காணும் வரையில் மட்டுமே
கண்டப்பின்னோ சந்தோஷிப்பது என் மனமுமே
கவிதையும் அணைத்தாண்டும் கரையாக புரளுமே
காத்திருப்பின் பலனும் கண்டும் அனுபவித்தோமே

தாலாட்டும் கனவுகளும் சற்றே ஓய்வெடுத்து
உன் மடியும் என் உடல் பாரத்தை சுமந்து
உன் கன்னக்கதுப்பை தொட்டு விளையாடும்
என் விரல்களை உன் கைகளும் மன்னித்து

தொடரும் உறவாக இணைந்து கைக்கோர்த்து
அன்பாய் அழகாய் மெல்ல நீயும் புன்னகைத்து
உன்னுடன் கதைத்த நொடிகள் கண்ணே மறவாது
இறுதி மூச்சும் மெல்ல பிரியும் உன்னோடு பிணைந்து.....

உன்னையே சுவாசித்துக்கொண்டு....

நிமிடத்தில் மாறிய மனதிற்காக
காதலின் இனிய மொழிக்காக
காத்திருக்கும் அன்பு இதயத்திற்க்காக
மௌன மொழி பேசும் கண்களுக்காக
கண்ணே நானும் உன் வழி பார்த்திருப்பேன்
உன்னையே சுவாசித்துக்கொண்டு என்றும் உனக்காக....
Related Posts Plugin for WordPress, Blogger...