"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, April 27, 2015

ஹலோ ஹலோ சுகமா?

அன்பு நண்பர்களே,

எல்லோரும் சௌக்கியமாப்பா?

இத்தனை நாள் காணாம போய் திடுதிடுப்புனு வந்து ஏன் எட்டிப்பார்த்தேன்னு கேட்டு திட்டாதீங்கப்பா...

அப்பப்ப வந்து அப்பப்ப காணாம போய் திரும்ப அப்பப்ப வந்து எட்டிப்பார்ப்பதற்கு காரணம் என்னால அதிகம் டைப் பண்ண முடியாத நிலை..

முகநூலில் கொஞ்சமா டைப் பண்ணினா போறும்னு அங்க டைப்பிட்டு இருந்தேன்...

இப்ப அங்கயும் க்ளாஸ் கட் அடிச்சாச்சு...

டைப் அதிகம் அடிக்க முடியல... வலி பின்னுது.. அதான் விஷயமே..

வை.கோ அண்ணா கிட்ட இருந்து ஒரு அவசர மெயில் வந்தது.

என்னன்னு பார்த்தால் என்னவோ என் ப்ளாக் பக்கம் போனால் அண்ணாவை ப்ளாக் பண்ணி ஏதோ விளம்பரத்தை தள்ளிவிடுகிறதாம்..

வேலை பளுவுக்கிடையே ஓடிவந்து என்னன்னு பார்த்தால் என்னையும் போடி வெளியே என்று விரட்டியது..

ஒரே டென்ஷனாகி யாரை அழைப்பது.... என்று யோசித்து ஆபத்பாந்தவன் தனபால் சாரோட மொபைல் நம்பர் எடுத்து அடித்தால் ரிங் போகவே இல்ல.

சரின்னு கூகுளில் டைப்பினேன் அனாவசியமா உள்ள வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டிட்டு ஜம்முனு உட்கார்ந்துட்டு இருக்கே என்ன பண்ண அப்படின்னு?

அதுவும் சொல்லி கொடுத்தது வேண்டாத்த சங்காத்தமெல்லாம் விட்டு ஒழி என்பது போல் 3 வது பார்ட்டி கெட்ஜெட் எல்லாம் ரிமூவ் செய் என்று..

நானும் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் போல் போய் கன்னாபின்னாவென்று என்னன்னவோ பதட்டத்தில் ரிமூவ் செய்து தள்ளிட்டேன்..

அதன்பின் தான் விளம்பரம் காஞ்சனா 2 ல வந்த முனி போல் காக்கா ஊச் ஓடியே போச்....

எல்லாரும் சேர்ந்து ஒண்ணா அடிக்க வராதீங்க. தாங்க மாட்டேன் ஆமாம் சொல்லிட்டேன் :)


ஊருக்கு போவதே கைவலிக்கு மருத்துவம் செய்துக்கொள்ள தான்....

அதனால நான் சொல்ல வரது என்னன்னா குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு மஞ்சு பேச்சு அல்பாயுசுல போச்சு என்றில்லாம ஊருக்கு போய் நல்லா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு வந்து சமர்த்தா பதிவுகள் போடலன்னாலும் முடிந்த அளவு பதிவுகள் படித்து கருத்து கண்ணாயிரமாக கண்ணும் கருத்துமாக கருத்திடுகிறேன் என்று உறுதி சொல்லிக்கொ(ல்)ள்கிறேன்






ennavo agudhu en blog la :(

என்ன நடக்குது என் ப்ளாக்ல யாரேனும் உதவுங்கப்பா.. வை.கோ அண்ணா சொல்லி தான் தெரியும்...
Related Posts Plugin for WordPress, Blogger...