"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Sunday, October 20, 2013

என்னை அம்மா ஸ்தானக்கு உயர்த்திய அன்பு அஞ்சான்....



எங்கள் வாழ்க்கையில் என்னை அம்மா ஸ்தானத்துக்கு உயர்த்தி, பெண் குழந்தை தான் வேண்டும் என்று ஆசைப்பட்டு இவர் காத்திருந்தபோது ஆண் மகவாய் பிறந்து... எனக்கு ரொம்ப சந்தோஷம்.. தினமும் கீர்த்தி வினாயகருக்கு செய்த குங்குமார்ச்சனை வீண் போகவில்லை.. ஆண்குழந்தை தான் பிறக்கும் என்று என் கணவரின் அண்ணன் Hemanth Kumar அவ்ர்களிடம் பந்தயம் 100 ரூபாய் கட்டி... பிரசவம் முடிந்ததும் பாவா வந்து என்னிடம் சிரித்துக்கொண்டே பணம் கொடுத்தது நினைவுக்கு வருகிறது....

நான் கர்ப்பிணியாக இருந்தபோது அது வேண்டும் இது வேண்டும் என்று எதுவும் கேட்காமல் இருந்தாலும் எனக்கு என்ன வேண்டும் என்று ஆசையாக என் கணவர் Sampath Kumar Narayanaswamyவாங்கிக்கொடுத்த நாட்களை நினைவுக்கொள்கிறேன்.

பிரசவ வலி அதிகமானபோது ஆஸ்பிடலுக்கு கிளம்பு என்று அம்மா துரிதப்படுத்தினாலும் மொபைல் இல்லாத காலம் அது எங்க வீட்டுக்காரர் வந்தா தான் நான் கிளம்புவேன் என்று பிடிவாதம் பிடிக்க, என் அப்பாவும், தம்பியும் ஒவ்வொரு பக்கம் போன் செய்து பின் என் கணவருக்கு விஷயம் தெரிந்து அரக்கப்பறக்க வந்தப்பின்னரே நர்சிங்ஹோமுக்கு கிளம்பினேன்.

மனதில் ஆயிரம் பயம்... செத்துவிடுவேனோ? என் பிள்ளையை பார்க்காமல் என் மரணம் ஏற்பட்டுவிடுமோ... நிறைய பயம்... கீர்த்தி வினாயகரை விடாமல் பிரார்த்தித்துக்கொண்டு போய் அட்மிட் ஆயாச்சு...

என்னங்க நான் பிரசவத்தில் இல்லாம போயிட்டால்.. உடனே இவர் அழ.... அம்மா எல்லோரும் சேர்ந்து என்னைத்திட்ட.. மூன்று நாட்கள் 
என்னை வலியில் துடிக்கவைத்தான் 21.10.1990 அழகாக பொன் நிறத்தில் க்ருஷ்ண விக்ரஹம் போல குழந்தையை கொண்டு வந்து காட்டினார்கள். எத்தனை அழகு... பொன் நிறம்.... பிஞ்சு விரல்கள்... சிமிட்டி சிமிட்டி கண் மலர்த்திப்பார்த்தான் அஞ்சான்..தலை நிறைய்ய்ய்ய முடி...

நர்சிங்ஹோம்ல இருந்த ஒரு வாரமும் நர்ஸுகளுக்கு ராத்திரி வேலையை ஒழுங்காக செய்யவைத்தான் அஞ்சான்.  முழுக்க அழுகை... ஆலாபனை.. கச்சேரி தான்..

பிரசவத்தில் மட்டுமே படுத்திய என் தங்கம் என் மூத்தப்பிள்ளை இன்று வரை இந்த நொடி வரை என்னை தாயாய் பார்த்துக்கொள்கிறான்.. இன்று என் மகனுக்கு 24 வயது தொடங்குகிறது..

தாய் தந்தையர் செய்யும் நல்லவை கெட்டவை எல்லாமே பிள்ளைகளை போய் சேரும் என்று சொல்வார்கள்.

நானும் சரி என் கணவரும் சரி யாருக்கும் எந்த கெடுதலும் மனதால் கூட நினைக்கவில்லை. எனக்கு கெடுதல் செய்துக்கொண்டிருப்போரைக்கூட அமைதியாக மன்னிக்கிறேன். ஏனெனில் தண்டிப்பதோ வெறுப்பை உமிழ்வதோ நம் வேலையில்லை. தெய்வம் பார்த்துக்கொள்ளட்டும் எல்லாவற்றையும். என் பிள்ளைகள் என்றும் சௌக்கியமாக இருக்க எங்களின் நல்லவைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கும் ஆசிகளாக..

இறைவன் கிருபையால் எல்லோரின் ஆசியால் சௌக்கியமாக, சந்தோஷமாக, நிறை ஆயுள், ஆரோக்கியம், மூத்தோர் ஆசிப்பெற்று எல்லோரிடமும் நற்பெயர் பெற்று என்றென்றும் சிறப்புடன் வாழ மனம் நிறைந்த அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அஞ்சான் Vignesh Ram.
Related Posts Plugin for WordPress, Blogger...