நான் எப்படி இருப்பேன்?
நான் என்ன தருவேன்?
அழகாய் இருப்பேனா?
அமைதியுடன் இருப்பேனா?
மனிதம் வளர்ப்பேனா?
அண்டை நாடுகளுடன்
வம்பு வளர்க்காது
நட்பு கொள்வேனா?
ஊழல் இல்லா அரசியல்
அமைப்பேனா?
கலகம் மறைந்து
அமைதிப்பூங்காவாக இருக்க
என் பங்கு எத்தனை?
என்னை வரவேற்பதில் தான்
எத்தனை எத்தனை ஆசை
என்னென்ன வார்த்தைகள்
எத்தனை வாழ்த்துகள்
எத்தனை கவிதைகள்
கவிஞர்களின் கவிதைவேட்டை
இன்னமும் தொடர்ந்திருக்க….
அரசியல்வாதிகளின் நமுட்டுச்சிரிப்பில்
எதிர்க்காலம் தொய்வுற்றிருக்க….
இன்றாவது ஒருவேளை சோறு
கிடைக்குமா என ஏழைகள் காத்திருக்க….
இந்தவருடம் எனக்கு ஏழரைச்சனி
தொடங்குதே என்று சிலர் அங்கலாய்க்க….
ஹப்பாடா இந்தவருடத்துடன்
ஒழிந்தது என்னைப்பிடித்து
இதுநாள்வரை ஓ(ஆ)ட்டிய சனி
என்று சிலர் நிம்மதி பெருமூச்சு விட….
மறைந்தவரை நினைவுக்கொண்ட
நல்லவர் சிலர்….
மனதில் இருந்த கசப்பெல்லாம்
மறையாதா என்ற வேண்டுதலோடு
ஒருசிலர்…
தட்டில் விழும் காசு
பையன் படிப்புக்கு ஆகுமா
ஏழை பூசாரி….
குடிக்காமல் வருவானா
இன்றொருநாளாவது உலைகொதிக்குமா
குடிகாரனின் மனைவியின் கண்ணீர் கேள்வி….
மனிதர்களின் ஆட்டம் போதாதென்று
இயற்கையும் ஆடிய ஊழித்தாண்டவம்
உயிரிழந்தோர் எண்ணிக்கை
சில தெரிந்து
பல மறைத்து......
ஈழத்து மக்களின் கண்ணீர்காயாத
ரத்தநிலமாகிப்போய்
இன்னமும் இருக்கும் துளி உயிரிலும்
ஈழம் மலரும் என்ற
நம்பிக்கை விளக்கெரிந்துக்கொண்டிருக்க….
இன்றோடு நடந்தவை எல்லாம்
கடந்து போன அனுபவங்களாக
தீண்டிவிட்டு சென்ற கருநாகமாக
தூண்டிவிட்டு சென்ற வில்லன்களாக
எப்படியோ முடிந்தது 2011….
இனி வரும் நான்….
எப்படி இருப்பேன்?
என்ன கொண்டுவந்து தருவேன்?
நல்லதை செய்வேனா?
புரட்சியை விதைப்பேனா?
அரசியலில் தூய்மையை ஆக்ரமித்து
கொள்ளையர்களை கொன்று குவிப்பேனா?
என்னை ஆரவாரம் செய்து
ஆர்பாட்டத்துடன் சந்தோஷக் கூச்சலுடன்
நம்பிக்கையுடன் வரவேற்கும் உலகமக்களுக்கு
நான் (2012) நல்லதை தருவேன் என்ற
மலைப்போன்ற நம்பிக்கையுடன்....
அடியெடுத்து வைக்கிறேன்....
நான் என்ன தருவேன்?
அழகாய் இருப்பேனா?
அமைதியுடன் இருப்பேனா?
மனிதம் வளர்ப்பேனா?
அண்டை நாடுகளுடன்
வம்பு வளர்க்காது
நட்பு கொள்வேனா?
ஊழல் இல்லா அரசியல்
அமைப்பேனா?
கலகம் மறைந்து
அமைதிப்பூங்காவாக இருக்க
என் பங்கு எத்தனை?
என்னை வரவேற்பதில் தான்
எத்தனை எத்தனை ஆசை
என்னென்ன வார்த்தைகள்
எத்தனை வாழ்த்துகள்
எத்தனை கவிதைகள்
கவிஞர்களின் கவிதைவேட்டை
இன்னமும் தொடர்ந்திருக்க….
அரசியல்வாதிகளின் நமுட்டுச்சிரிப்பில்
எதிர்க்காலம் தொய்வுற்றிருக்க….
இன்றாவது ஒருவேளை சோறு
கிடைக்குமா என ஏழைகள் காத்திருக்க….
இந்தவருடம் எனக்கு ஏழரைச்சனி
தொடங்குதே என்று சிலர் அங்கலாய்க்க….
ஹப்பாடா இந்தவருடத்துடன்
ஒழிந்தது என்னைப்பிடித்து
இதுநாள்வரை ஓ(ஆ)ட்டிய சனி
என்று சிலர் நிம்மதி பெருமூச்சு விட….
மறைந்தவரை நினைவுக்கொண்ட
நல்லவர் சிலர்….
மனதில் இருந்த கசப்பெல்லாம்
மறையாதா என்ற வேண்டுதலோடு
ஒருசிலர்…
தட்டில் விழும் காசு
பையன் படிப்புக்கு ஆகுமா
ஏழை பூசாரி….
குடிக்காமல் வருவானா
இன்றொருநாளாவது உலைகொதிக்குமா
குடிகாரனின் மனைவியின் கண்ணீர் கேள்வி….
மனிதர்களின் ஆட்டம் போதாதென்று
இயற்கையும் ஆடிய ஊழித்தாண்டவம்
உயிரிழந்தோர் எண்ணிக்கை
சில தெரிந்து
பல மறைத்து......
ஈழத்து மக்களின் கண்ணீர்காயாத
ரத்தநிலமாகிப்போய்
இன்னமும் இருக்கும் துளி உயிரிலும்
ஈழம் மலரும் என்ற
நம்பிக்கை விளக்கெரிந்துக்கொண்டிருக்க….
இன்றோடு நடந்தவை எல்லாம்
கடந்து போன அனுபவங்களாக
தீண்டிவிட்டு சென்ற கருநாகமாக
தூண்டிவிட்டு சென்ற வில்லன்களாக
எப்படியோ முடிந்தது 2011….
இனி வரும் நான்….
எப்படி இருப்பேன்?
என்ன கொண்டுவந்து தருவேன்?
நல்லதை செய்வேனா?
புரட்சியை விதைப்பேனா?
அரசியலில் தூய்மையை ஆக்ரமித்து
கொள்ளையர்களை கொன்று குவிப்பேனா?
என்னை ஆரவாரம் செய்து
ஆர்பாட்டத்துடன் சந்தோஷக் கூச்சலுடன்
நம்பிக்கையுடன் வரவேற்கும் உலகமக்களுக்கு
நான் (2012) நல்லதை தருவேன் என்ற
மலைப்போன்ற நம்பிக்கையுடன்....
அடியெடுத்து வைக்கிறேன்....
Tweet |