"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, November 7, 2013

என் மனதுக்கினிய என்ன(கண)வருக்கு




ஏன் மம்மி நகம் வளர்க்க விட மாட்டேன்றீங்க. தலைமுடியை ஃப்ரீயா விட சம்மதிக்க மாட்டேன்றீங்க. இப்படி நிறைய மாட்டேன்றீங்க. அம்மா சொன்ன ஒரு சொல். நீ படிச்சு முடிச்சதும் என்ன ஸ்டைல் வேணும்னாலும் பண்ணிக்கோ. சரி மூணாவது வருஷம் முடிஞ்சிருச்சு ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா ஜாலியா இருக்கலாம்னு நினைக்கும்போது பொண்ணு பார்க்க வந்தாச்சு மாப்பிள்ளை.

நான் நல்லா இருக்கமாட்டேன். ஆனா என்னை பாக்க வந்த மாப்பிள்ளை ஹீரோ போல இருந்தார் அழகுல, மனசுல, அன்புல, பண்புல. மாப்பிள்ளையை பார்க்கும் சுவாரஸ்யம் இல்லை. அவசரமா கல்யாணம் பண்றாங்கன்ற எரிச்சல். ஆனால் எங்க சொந்தங்கள் முக்கியமா என் தங்கை எல்லாருக்கும் இஷ்டமாகிவிட்டது மாப்பிள்ளையை பார்த்ததும், மாப்பிள்ளை எல்லோருடனும் பழகின விதமும்.

ஒரு சிலர் வீட்டில் மாமியார் மருமகள் சண்டை ஓரவத்தி சண்டை நாத்தனார் சண்டை இருக்கும். எங்க வீட்டில் அதுக்கும் நோ சான்ஸ். அன்பாலயே எல்லார் மனசையும் கட்டிப்போட்டுட்டார். அவருடைய மனைவி நானும் அவர் வழி…

என் கணவர் கண்டிப்பானவர் கிடையாது. ஆனால் நிறைந்த அன்பு தரும் நேசம் நிறைந்தவர்.

ஏன் இவ்ளோ நீளமான கதைன்னு யோசிக்கிறீங்களாப்பா? பொண்ணுப்பாக்க வந்தது 08.03.1989 நிச்சயதார்த்தம் 08.06..1989 கல்யாணம் 08.11.1989 ஆமாம் முழுமையான நிறைவான சந்தோஷமான 24 வருடங்களின் நிறைவு.

அடுத்த ஜென்மத்திலும் இவரே எனக்கு புருஷனா கிடைக்கணும்னு நான் எப்போதும் போல் வேண்டிப்பேன். ஒருவேளை நான் பிறந்தால்.

இன்னும் எத்தனை நாள் இருப்போமோ தெரியாது? இறந்தால் மீண்டும் பிறப்போமோ அதுவும் தெரியாது. பிறந்தால் நம் எல்லா சொந்தங்களுடனும் நட்புகளுடனும் பிறப்போமோ அதுவும் தெரியாது. அதனால் இருக்கிற இந்த கொஞ்ச நாட்களையும் நிறைவாக சந்தோஷமாக அன்புடன் வாழ்ந்துவிடுவோமே.

எங்கள் 24 ஆம் வருட திருமண நாளை எல்லோரும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...