"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, July 21, 2010

உனக்கும் எனக்குமான....

உனக்கும் எனக்குமான இடைவெளியை
நினைவுகள் தின்று தீர்க்கட்டும்

நம்முள் உருவான காதல்
உறுதியாய் நின்று பறைசாற்றட்டும்

நம்மில் நிறைந்த அன்பு கரைந்து
மனதை உயிர்ப்பிக்கட்டும்

நம்மிடையே தொடங்கிய புரிதலின்மை
என்றும் மறைந்து போகட்டும்

பெருகிய கண்ணீரில் உண்மை அன்பை
உரக்கச்சொல்லி கதறட்டும்

நம்மை இணைத்த இறைவன்
பிரிந்திடாது காக்கட்டும்

இன்றைய விடியல் உனக்கு
நன்மை மட்டுமே சேர்க்கட்டும்

உருகி கரையும் மனதுடன்
காதலை பிதற்றட்டும்

நான்கொண்ட மௌனமும்
காதல் சத்தியமென சொல்லட்டும்

பிரிவு நமக்குள் வேண்டாமென
இறையை வேண்டட்டும்

உன்னுள் என்னை முழுதாய்
உயிர்ப்பித்த அன்பு அமைதியாய்

உன்னை என்னிடம் சேர்க்கும்
என்ற நம்பிக்கையோடு காத்திருக்கட்டும்....

Monday, July 12, 2010

கூசிடாது வாங்கும் லஞ்சம்....

காசுகொடுக்காமல் வேலை நடக்க
இந்தியத்தாத்தா நடமாடவில்லையே

காசுகொடுத்தாலாவது வேலை நடக்க
கைக்கட்டி வரிசையில் நிற்கையிலேயே

குறைகளை சுட்டிக்காட்டி ஒதுக்கித்தள்ளி
போய்வா மற்றொருநாள் பார்க்கலாம்

அசட்டையான பதிலும் காவியேறிய பற்களும்
கறைபடியாத கையும் இல்லை காப்பாற்ற நாதியுமில்லை

லஞ்சத்தின் பிறப்பு திருட்டுத்தனமாய் தொடங்கி
தொடர்ந்து கொண்டாடும் பகிங்கர விழாவாகிவிட்டது

உழைத்தவர்களின் வயிறுகட்டி வாய்க்கட்டி
உண்டுகளிப்பவர்களின் கையில் கொட்டி

இன்னமும் வேலை நடக்கவில்லை ஐயா...
நெஞ்சுபொறுக்குதில்லையே ஐயா....

இந்தியனே வெட்கப்படும் கேட்டினை
கேட்டு கண்டிக்க ஆளே இல்லையா?

Thursday, July 8, 2010

நீயே வேண்டும்.....நீ மட்டுமே வேண்டும்...

உறக்கத்திலும் அணைத்துக்கொள்ள
நீ வேண்டும்....

மன இறுக்கத்திலும் ஆறுதல் சொல்ல
நீ வேண்டும்....

இரக்கத்திலும் என் மனம் நிறைக்க
நீ வேண்டும்....

உருகும் உயிரிலும் உணர்வாய் கலக்க
நீ வேண்டும்....

இன்பச்சுவையிலும் திகட்டாது இனிக்க
நீ வேண்டும்....

துன்பச்சுமையிலும் சோர்ந்திடாது அருகே
நீ வேண்டும்...

கவிதைவரிகளிலும் தமிழாய் சுவைத்திட
நீ வேண்டும்....

இறுதிமூச்சிலும் உன்மடியில் சாய
நீ வேண்டும்.....

நீயே வேண்டும்... நீ மட்டுமே வேண்டும்.....
Related Posts Plugin for WordPress, Blogger...