"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, August 30, 2013

ப்ரியங்கள்....




உன்னைப்பார்க்கவே மாட்டேன்
வறட்டுப்பிடிவாதம் கொண்டு...
ப்ரியங்களில் ஊறிய மனம் மட்டும்
உன்னையே நினைத்துக்கொண்டு....

Thursday, August 29, 2013

ஓம் ஸ்ரீ சாயிநாதாய நமஹ:


ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் கனவில் ஒரு வயதானவர் தலையில் வெள்ளைத்துணி முறுக்கி… திண்ணையில் “ அப்ப எங்க வீட்டில் திண்ணை இருந்தது “  ஒய்யாரமாக சாய்ந்து உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறார்…

யார் இந்த தாத்தா? எனக்கு தெரியவில்லை.. எங்கள் குடும்பத்தில் தாத்தா யாராவது இறந்தவர் வந்தாரோ கனவில் என்றே நினைத்தேன்..

மூன்று முறை கனவு வந்தது.. முதல் முறை இவர் எங்க வீட்டு திண்ணையில்.. இரண்டாவது முறை ஒரே மண் திட்டு அங்கே ஒரு கல்.. அந்த கல்லின் மேல் உட்கார்ந்துக்கொண்டு ஒரு கால் மீது இன்னொரு கால் வைத்துக்கொண்டு கையை அருள் பாலிப்பது போன்று… சுற்றி எந்த அரவமோ அலங்காரமோ இல்லை.. சிதிலமடைந்த இடம் போன்று… மூன்றாவது முறை எங்க வீட்டின் சுவர் மேல் உட்கார்ந்துக்கொண்டு என்னையே பார்ப்பது போன்று….

எனக்கு தெரியவில்லை இவர் யாரு என்று..

பள்ளிப்படிப்பு, கல்லூரி முடிந்து திருமணம் முடிந்து பிள்ளைப்பேறும் முடிந்து என் கணவர் குவைத் செல்லும் வாய்ப்பு வந்தபோது மும்பையில் ஒரு தவிர்க்க முடியாத பிரச்சனை… அப்போது அங்கிருந்த ஏதோ ஒரு கோயிலில் நுழைந்து நல்லபடியாக குவைத் போய் சேர வேண்டும் என்று வேண்டினார்.. வேண்டிவிட்டு பார்த்தால் அது பாபா கோயில்… அங்கிருந்தோர் சொன்னது ஷீர்டி பாபா கோயில் இது.. வேண்டிக்கிறது எல்லாம் கண்டிப்பா நடக்கும் என்று…

முதல் விடுமுறைக்கு நேராக சென்னை வராமல் எங்களை மும்பை வரச்சொல்லி 1993 யில் எல்லாம் நண்டு சிண்டு எங்க குழந்தைகள் தான் நான் என் மகன் விக்னேஷ் ராம், என் தங்கை, தங்கை கணவர், அவர்களின் இரண்டு குழந்தைகள் கணேஷ் ராம் தத், விஜய விமோஹிதா, அம்மா எல்லோரும் கிளம்பிச்சென்றோம்..
நாங்கள் ஷீர்டி செல்வது இப்போது போல அப்போது அத்தனை எளிதன்று.. எங்கும் சாப்பாடு சரியாக கிடைக்காமல்… குடிக்க நீர், பிள்ளைகள் மூவரும் கைப்பிள்ளைகள் அவர்களுக்கு உணவு, சுடும் வெயில்… காற்று இப்படி எல்லாம் தாண்டி ஒருவழியாக சென்று அடைந்தோம் ஷீர்டி.. அந்த இடம் எனக்கு முன்பே கண்டது போலவே இருந்தது..

இப்போது போல தார் ரோடு, கடைகள் சுற்றி இப்படி இல்லை அப்போது வெறும் மணல் திட்டு தான் எங்கும்…

உள்ளே நுழைந்தால் பாபா… என் கனவில் கண்ட பாபா.. எத்தனை கருணை பாபாவுக்கு என் மேல்…


இரண்டாவது பிரசவம் மிக சிக்கலானபோதும், இவருக்கு ஆபிசில் ஒரு பெரிய பிரச்சனை வந்தபோதும், என் மூத்த மகன் கார் ஆக்சிடெண்டில் பிழைத்ததும் இந்த ஷீர்டி பாபாவின் கருணையே.. அற்புதங்கள் நடக்க ஆரம்பித்தது அன்று முதல் இதோ இன்று வரை…

Wednesday, August 28, 2013

பக்தமீரா தொடர்ச்சி (9)



25.
உடுத்தும் உடையிலும் நீ
வணங்கும் இறையிலும் நீ
உரசிச் செல்லும் காற்றிலும் நீ
என்னிலும் நீ எந்தன் பாட்டிலும் நீ 


26.
நீ எங்கே எங்கே என்று
தேடி அலையும் என் மனதில்
உன்னை முழுதும் நிறைந்தவன் நீ
காணும் பொருளினும் உன்னை
காண்பித்தவனும் நீ 


27.

கண்ணா கண்ணா என்று உருகி அழைக்க
மாயவனாய் வந்து மறைந்து போகும்
உந்தன் போக்கு வேண்டாம் கண்ணா
கண்ணாய் எந்தன் இமையாய்
என்றும் நீ இருந்துவிடு கண்ணா...

Saturday, August 24, 2013

என் அன்புத்தேவதையின் திருமண நாள் இன்று....



ரூம் எல்லாம் நல்லா இருக்கணும்பா…

முன்னாடி நல்லா டெகொரேஷன் பண்ணிருங்க..

சரிங்க சார்… அட்வான்ஸ் பே பண்ணிட்டு போங்க..

ஓகே..

பாவா பாவா… சீக்கிரம் கிளம்புங்க.. எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கித்தரணும்…

ஓகே ஷோபி…

சத்திர ஓனர் : ஏம்மா பாப்பா எந்த கிளாஸு படிக்கிறே??

ஷோபி மூக்குக்கண்ணாடியை கில்லிப்படத்துல வர விஜய் தங்கைப்போல விசுக்குனு பார்த்துட்டு சொன்னது… ஹலோ கல்யாணமே எனக்கு தான்…

கல்யாணத்துக்கு சத்திரம் பார்க்க என் வீட்டுக்காரருடன் போய் ஓகே சொன்ன மணப்பெண்.. பார்க்க பொம்மை மாதிரி அழகா இருப்பா…

குட்டிப்பொண்ணு போலவே.. க்யூட்டா… இத்தனை வயதானாலும் ஷோபி சிரித்தால் குழந்தை சிரிப்பது போல செம்ம க்யூட்டா இருக்கும்…

ஷோபி பட்டு சாரிக்கு மேட்சா ப்ளவுஸ் தைச்சாச்சாடி?

தைச்சாச்சு மஞ்சு…

எனக்கு ட்ரெஸ் பாவா ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணிட்டியா?

முடிஞ்சுது மஞ்சு…

இப்டி தன் கல்யாணத்துக்கு தனக்கானவையும் எடுத்து வெச்சு அழகா எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் கூட பார்த்து பார்த்து செய்த என் அன்புத்தங்கை… ஹுஹும் எனக்கு அம்மான்னு சொன்னா சரியா இருக்கும்… 

எங்க வீட்டு பம்ப்ளிமாஸ் ( இப்ப இளைச்சு அழகாயிட்டா... ) என் அன்புத்தங்கை திருமதி ஷோபி ஸ்ரீதர் 23 ஆம் வருட திருமண நாள்..


திருமதி ஷோபிஸ்ரீதர் ( பாருடி தங்கையா இருந்தும் உனக்கு திருமதி எல்லாம் போட்டு எவ்ளோ மரியாதையா விஷ் பண்றேன்னு ) கல்யாண நாள் இன்று 24.08.1990 இருபத்தி மூன்றாம் வருட திருமண நாளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளுடனான ஆசிகள் தம்பதியருக்கு…


ஷோபி நல்லாருந்தா நான் கண்டிப்பா சௌக்கியமா இருப்பேன்.. இன்னும் என் தங்கையைப்பற்றி சொல்ல நிறைய இருக்கு… அவளுடைய பிறந்தநாள் வருது.. அதில் சொல்கிறேன் ஷோபியின் சாகசங்களை…


எப்போதும் நான் வேண்டுவது என் தங்கையும் தங்கையின் கணவர், குழந்தைகள் எல்லோரும் சௌக்கியமாக நீடுழி வாழ வேண்டும் என்பதே...

ஏன்னா எங்க வீட்டின் அன்பு தேவதை என் தங்கை...

எனக்கு என்ன கஷ்டம் என்றாலும் சாமி கிட்ட சொல்லனும்னு தோணாது.. உடனே ஷோபிக்கு தான் போன் செய்வேன்... ஷோபிக்கிட்ட பேசிட்டா போறும்.. எனக்கு சரியாகிவிடும்.. உடல்நலம் சரி இல்லையென்றாலும் ஷோபிக்கிட்ட தான் முதல்ல சொல்வேன்...

ஒரு தடவை மனசு ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமாகி ஷோபிக்கு கால் செய்தப்ப ஷீர்டி போயிருந்ததால் போன் அட்டெண்ட செய்யலை... ரொம்ப உடம்பு முடியாமல் நெஞ்சுவலி வந்து ஆஸ்பிட்டல் கொண்டு சென்றனர் நடுராத்திரி.. என் பலம்... எப்போதும் என் அன்புத்தங்கை... ஷோபி எனக்கு தங்கை என்று சொல்வதை விட.... என் அம்மா, என் தோழி, என் வழிக்காட்டி, என் தேவதை, என் காவல் தெய்வம்... இது தான்.. ஷோபி எனக்கு ஆசீர்வாதம் செய்தால் நாங்க எல்லோருமே சௌக்கியமா இருப்போம்..

ரொம்ப முக்கியமான விஷயம்.... என் கணவருக்கு ஷோபி ரொம்ப செல்லக்குழந்தை... ரொம்ப ரொம்ப ரொம்ப செல்லம்.... நான் எதுனா சொல்லி என் கணவர் மறுத்தால் ரெக்கமண்டேஷனுக்கு நான் போய் நிற்பது ஷோபிக்கிட்ட தான்.. ஏன்னா ஷோபி சொல்லி என் கணவர் மறுத்ததே இல்லை என்றும்....

என் பிள்ளை விக்னேஷ் ராமிடம் உன் அம்மா பெயர் சொல்லுன்னு சொன்னா டக்குனு அவன் வாயில் வருவது என் தங்கைப்பெயர் தான்... அத்தனை அந்நியோன்யம்.... குழந்தை பிறந்ததும் ஷோபி கையில தான் அதிகம் ராத்திரி எல்லாம் இருந்தான்... இன்றும் அஞ்சான் ஷோபியின் செல்லம்...

எங்கள் எல்லோரின் பிரார்த்தனைகள் எப்போதும் ஷோபிக்கும் ஷோபி குடும்பத்தினருக்கும்....








Thursday, August 22, 2013

முதல் பதிவு.....



முதல் பதிவின் சந்தோஷம் என்ற தொடர் பதிவுக்கு என்னை அழைத்த ஸ்ரீராம் சாருக்கு என் அன்பு நன்றிகள்…

நான் பாட்டுக்கு வேலைக்கும் வீட்டுக்கும் ஒரு இயந்திரம் போல போய்க்கிட்டு வந்துக்கிட்டு இருந்தேன்… பாட்டு நடனம் வரைதல் கவிதை எல்லாம் எப்பவோ தூக்கி பரண் மேலே போட்டாச்சு..

திரு ராஜா ஐயா அவர்கள் தான் என்னை முத்தமிழ் மன்றத்தில் சேர்த்து விட்டார்…

ஆனால் அதில் ஒரு சின்ன சங்கடம்.. அங்க எல்லாமே தமிழ்ல மட்டும் தான் டைப்பணும்.. ஆனா தமிழ் டைப்பிங் நமக்கு சுட்டுப்போட்டாலும் வராது.. முத்தமிழ் மன்றத்தில் சேர்த்து விட்ட ராஜா ஐயாவுக்கு முதற்கண் என் நன்றிகள்… அப்படி என்னை சேர்த்துவிட்டதால் இப்போது எல்லா இடத்திலும் என்னால் தமிழில் டைப்ப முடிகிறது… கருத்து எழுத முடிகிறது.. கலாய்க்க முடிகிறது…

தமிழில் மெல்ல மெல்ல டைப் அடிக்க கற்றேன் www.higopi.com மூலமா… அதன்பின் ஆகஸ்ட் மாதம் 16, 2007 நைட் விருதைக்கண்ணன் என்ற ஒருவர் மேடம் நான் எழுதி இருக்கும் கவிதையில் பிழைத்திருத்திக்கொடுங்கன்னு கேட்டார்… திருத்திக்கொடுக்கும்போது யோசித்தேன் ஏன் நாமும் தொடரக்கூடாதுன்னு.. அப்படி தொடர்ந்தது தான்..

வலைப்பூவில் என் படைப்புகள் எல்லாம் போட்டுக்கொண்டே வந்தேன்.. பின்னூட்டம் எல்லாம் வரனும்னு கூட தெரியாது எனக்கு.. நல்லவேளை பின்னூட்டம் போட வந்திருந்தால் என் எழுத்தை பார்த்து உதைக்க வந்தால் எங்க தப்பி ஓடுவேன்?

எனக்கும் ஸ்ரீராம் சார் போலவே படைப்புகள் தருவது விட கருத்து எழுதுவது மிக விருப்பமான விஷயம்…  அதன்படி… ஒரு நாள் கூகுளில் என் மகன் இபானுக்கு  படம் தேடிப்போனால் நேரே கொண்டு வந்து ரமணி சார் வலைப்பூவில் விட்டது என்னை… அப்ப அவர் கவிதை படித்ததும் மிக எளிதாக அதே சமயம் கருத்துள்ளதாக தோணித்து.. கருத்து எழுத ஆரம்பித்தேன்.. எழுதினேன்…. தொடங்கியது இதோ இப்ப வரை தொடர்கிறது…

முதல் பதிவின் போது ஏற்பட்ட சந்தோஷத்தை விட… முதல் கருத்து பதிந்தபோது ஏற்பட்ட சந்தோஷம் எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை என்பதே சத்தியம்….

என் முதல் பதிவின் சந்தோஷம் தொடர் எழுத அழைத்த ஸ்ரீராம் சாருக்கு மீண்டும் ஒரு முறை அன்பு நன்றிகள்…

நான் இரண்டு பேரை அழைக்கனும்ல??

ஸாதிகா
சூரி சிவா என்னும் சுப்பு அப்பா..

இருவரையும் அன்புடன் இந்த தொடர் எழுதும்படி அழைக்கிறேன்…

Tuesday, August 20, 2013

வலைப்பதிவர் சந்திப்பு விழா இரண்டாம் ஆண்டு...

அன்பு நிறை நண்பர்களுக்கு...

வலைப்பதிவர் சந்திப்பு விழா 01.09.2013

தங்களின் வருகையை உறுதி செய்து கொள்ள கீழே கொடுத்துள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்... நன்றி...

விழா சிறப்பாக நடைபெற மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...

விழா சிறப்பாக நடைபெறவும், எல்லோரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்கவும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்..



மின்னல் வரிகள் பாலகணேஷ்
9003036166
bganesh55@gmail.com

மதுமதி
9894124021
kavimadhumathi@gmail.com

திண்டுகல் தனபாலன்
9944345233
dindiguldhanabalan@yahoo.com


kavimadhumathi@gmail.com
பட்டிகாட்டான் ஜெய் – pattikattaan@gmail.com

சிவக்குமார் – madrasminnal@gmail.com
ஆரூர்மூனா.செந்தில்குமார் – senthilkkum@gmail.com
அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com
பாலகணேஷ் – bganesh55@gmail.com
சசிகலா - sasikala2010eni@gmail.com

Sunday, August 11, 2013

கணிணியும் நானும்....

அன்பு சகோதரர் செய்தாலி http://nizammudeen-abdulkader.blogspot.com/ கணிணி தொடர் பகிர்வுக்கு என்னை அழைத்ததற்கு அன்பு நன்றிகள்… அதே சமயத்தில் அதிக காலதாமதம் செய்ததற்கு மன்னிப்பு வேண்டிக்கொள்கிறேன்… நாலு நாள் லீவுப்பா ரமதானுக்கு. அதான் வெளியே சுற்றக்கிளம்பிவிட்டதாலும் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்ததாலும் என்னால் உடனடியாக பதிவிடமுடியவில்லை…


போதும்மா… இந்த புராணம்… கணிணி முதன்முதல் எப்ப பாத்தீங்க, தொட்டீங்க.. பயிற்சி ஆரம்பிச்சீங்கன்னு சொல்லுங்கன்னு நீங்க எல்லோரும் கத்தறது எனக்கு காதில் கேட்கிறதுப்பா…


நான் மூன்றாம் வருடம் டிப்ளமா எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங் படிச்சிட்டு இருந்தப்ப தான் முதல் வருடம் கம்ப்யூட்டர் வந்தது எங்களுக்கு பயிற்சியாக…


டிவி பெட்டி மாதிரி வெள்ளைக்கலர்ல… உள்ள ஸ்க்ரீன் கறுப்புக்கலர்ல… எழுத்துகள் எல்லாம் பச்சை கலர்லன்னு முதன் முதல் எல்லோரும் கம்ப்யூட்டரை ஜூவில் சென்று புலியை பார்ப்பது போல் அதிசயமாக பார்த்தோம்…


ஒரு கமாண்ட் அடிக்க முழ நீளத்துக்கு ப்ரோக்ராம் எழுதும் அவஸ்தை எனக்கு பிடிக்காமல் போனது…. ஒருவழியா அந்த வருடம் முடிந்ததுமே கல்யாணம் ஆகிவிட்டதால் திரும்ப கணிணிப்பற்றிய எந்த பேச்சும் எழவில்லை… எதிர்லயும் மனதிலேயும்..
கல்யாணம் ஆகி அடுத்த வருட கல்யாண நாள் வருமுன் கையில் குழந்தை.. குழந்தைப்பேறுக்காக அம்மாவீட்டில் இருந்தபோது.. அம்மாவின் பணி கம்ப்யூட்டர் செக்‌ஷனுக்கு சூப்பர்வைசராக ப்ரமோஷன் கிடைக்கவே…


நைட் எல்லாம் அஞ்சான் அழுகையை சமாளிக்க மடியில் போட்டுக்கொண்டு நான் பாடிக்கொண்டிருக்க… எங்க அம்மா ப்ரோக்ராம் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் ராத்திரிமுழுக்க.. புதிய விஷயம் எதுவென்றாலும் அதில் ஆர்வமும் ஈடுபாடும் அம்மாவுக்கு அதிகம்… கம்ப்யூட்டரில் அம்மா முத்துக்குளிக்க.. நான் சராசரி வாழ்க்கையில் மூழ்க.. அப்படியாக கணிணி இரண்டாம் முறையாக கண்முன் வந்து கண்ணாமூச்சி ஆடிவிட்டு போனது…

அஞ்சான் ஒன்னரை வயதாகும்போது என்னவர் குவைத்தில் வேலைக்கிடைத்து எங்களுக்கு டாட்டா காண்பித்துவிட்டு விதேசம் செல்ல… அஞ்சானும் நானுமாக நாட்கள் நகர ஆரம்பித்தது… வாரத்திற்கு ஒரு முறை என்னவரிடம் இருந்து கடிதமும், வாரத்திற்கு மூன்று முறை தொலைபேசியில் குரலும்.. யாராவது வந்தால் அவர்களிடம் இவர் ஆடியோ கேசட்டில் பேசியும் பாடியும் அனுப்ப வாழ்க்கை ஒருவிதமாக சென்றது ரம்மியமாக இல்லையென்றாலும் ஏதோ ஒருவிதமாக….


அப்ப அம்மாவும் என் பெரியம்மா மகனும் ஒரு முடிவெடுத்தனர்.. மஞ்சு இப்படி வீட்டில் கிடந்து தனியா அல்லல்படுவதை விட ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸுக்கு அனுப்பினா தான் என்ன?? இப்படி அவர்கள் முடிவெடுத்து என்னை கம்ப்யூட்டர் க்ளாசுக்கு அனுப்பிய வருடம் 1993.


ஸ்ரீ வென்ஸ் இன்ஸ்ட்யூட்ல காலை டைப்பிங்கும் மாலை கம்ப்யூட்டர் க்ளாசுமாக செல்ல ஆரம்பித்தேன்.. கம்ப்யூட்டரில் என்ன படிப்பது?? ஞானப்பழமாச்சே நான் தான்.. ஒன்றும் தெரியாம திருதிருன்னு முழிக்க.. அங்கும் அம்மா வந்து இப்ப பிரபல்யமாக இருக்கும் விண்டோஸ் லோட்டஸ் ஒன் டூ த்ரீ இது ரெண்டும் எடுத்து படிக்கச்சொன்னாங்க…



வாழ்க்கையில் மீண்டும் கம்ப்யூட்டர் முன்னாடி… என்ன வாழ்க்கைடா இது.. நொந்துக்கொண்டே மீண்டும் கம்ப்யூட்டர்ல புதியக்கோணத்தில்… ஆனால் சுவாரஸ்யமாக இருந்தது.. எல்லாவற்றுக்கும் ஷார்ட் கட் கீஸ்…  எனக்கும் இஷ்டமானது….எக்சாமுக்கு சரியாக இவரும் லீவுக்கு இந்தியா வர.. ரொம்ப சந்தோஷம் என்னவருக்கும்.. ஆனால் ஸ்ட்ரிக்டாக வேலைக்கு அனுப்பமாட்டேன்னு சொல்லிட்டார்…
எக்சாம் முடிந்து சர்டிபிகேட் வாங்கினப்ப எதையோ சாதித்த ஒரு சந்தோஷம்… 1995 ல நானும் அஞ்சானும் குவைத் பயணமானோம்… இங்கு குவைத் வந்தப்பின்னர் எனக்கும் போரடிக்கவே வேலைக்கு போகிறேனே என்றேன்.. ஹுஹும் என்று சொல்லிவிட்டார்.. திரும்ப கணிணிப்பற்றிய பேச்சு மூச்சு நின்றுவிட்டது….



திரும்ப 1997 ல என் ஆசைக்காக எம் ஏ சோஷியாலஜி படிக்க ஆசைப்பட்டு இந்தியா வந்தேன்… ஹுஹும் வந்தோம் நானும் அஞ்சானும்… மீண்டும் அம்மா என்னை கம்ப்யூட்டர் கோர்ஸில் சேரச்சொல்லவே திரும்பவும்….கம்ப்யூட்டர் க்ளாசுக்கு போன இடத்தில் உஷா மேடம் என் நெருங்கிய தோழியாக ஆகிவிட்டார்.. பின்னர் அம்மாவிடம் பரிச்சயம் செய்து வைத்தப்பின் அம்மாவுக்கு க்ளோசாகிவிட்டார்..



1999 ல மீண்டும் குவைத் பயணம்… நான் வேலைக்கு போகட்டுமா என்று கேட்க இவரும் சரி என்று சொல்லவே.. குவைத் வரும்போது உனக்கு ஒரு சர்ப்ரைஸ் என்றார்… ம்ம் என்னவா இருக்கும்…. யோசிச்சு ஒன்னும் தோணாம வீட்டுக்கு வந்தாச்சு.. என் கண்ணை மூடிக்கொண்டு போய் நிறுத்திய இடம் எங்க ரூம்ல அழகா கணிணி, ஸ்கேனர், ப்ரிண்டர்… எனக்காக என்னவர் கொடுத்த பரிசு..கணிணியும் நானும்…. மெயில் அனுப்பத்தொடங்கி..கம்ப்யூட்டரில் தான் என் வேலை முழுக்க…வேலைக்கும் முயற்சித்து வேலை கிடைத்ததுமே.. சந்தோஷமாய்… வேலை முழுக்க முழுக்க கணிணில தான்… அப்ப ஆரம்பிச்சது….



2007 ல ராஜா ஐயா மூலம் முத்தமிழ்மன்றம் பிரவேசம்.. அங்கே எல்லாம் தமிழ்ல தான் பதிவுகள்… எனக்கோ தமிழ் டைப்பிங் தெரியாது… அவ்ளோ தான் விட்டாச்சு.. மீண்டும் ஆகஸ்ட் 15 நைட் தமிழ்ல டைப்பிங் www.higopi.com  ல போய் தமிழ்ல அடிச்சு காப்பி பேஸ்ட் பண்ண ஆரம்பிச்சு தொடங்கிய பயணம் இதோ இன்று கணிணி பகிர்வு வரை தொடர்கிறது….


இடையே எனக்கு எலும்பு தேய்மானம் காரணமாக இனிமே கணிணி முன்னாடி மட்டுமல்ல கணிணி பக்கமே திரும்பக்கூடாதுன்னு டாக்டர் சொல்ல… நானும் சமர்த்தா கேட்பது போல கேட்டுட்டு அப்புறம் அதை காத்துல பறக்கவிட்டுட்டு இதோ இங்கே….


இருக்கும்வரை தொடரும் இந்தப்பயணம்….


இந்த தொடர் பகிர்வில்…. நான் ரமணி சார் அவர்களையும் ரிஷபன் சார் அவர்களையும் வை.கோ அண்ணா அவர்களையும் தொடரும்படி வேண்டுகிறேன்…





வாய்ப்புக்கொடுத்த செய்தாலிக்கு மீண்டும் ஒரு முறை அன்பு நன்றிகள்…


Monday, August 5, 2013

அதீத அன்பு....



.கண்ணுறக்கத்திலும்
என் மடியில்...

கனவுகளிலும்
என் கைப்பிடியில்...

சோகத்திலும்
என் கண்ணீர் துளிகளில்...

யார் சொன்னது
அதீத அன்பு
அவஸ்தை என்று?

Sunday, August 4, 2013

நட்பு என்றால் நம்பிக்கை....

நட்பு அழைப்பை நீங்க அனுப்பினாலோ அல்லது நட்பு அழைப்பு உங்களுக்கு வந்தாலோ நீங்க அனுப்பும் நபர், உங்களுக்கு நட்பு அழைப்பு அனுப்பும் நபர் எப்படிப்பட்டவர் என்பது கண்டிப்பாக தெரிய வாய்ப்பில்லை… நட்பு வட்டத்தில் இணைந்தப்பின்னர் தன்னைப்பற்றி நேர்மையாக சொல்லி… தன் குடும்பத்தினரிடம் தன் நட்பை கம்பீரமாக அறிமுகப்படுத்தி குடும்பத்தினரிடமும் இயல்பாய் பழகும் நட்பே நேர்மையான நட்பு…. நட்பு அழைப்பு கொடுத்துவிட்டோ அல்லது ஏற்றுக்கொண்டோ தான் மட்டும் தன்னைப்பற்றி எதுவும் சொல்லாமல் நம்மைப்பற்றி அதிகம் விசாரிக்கும் நட்பு எப்படிப்பட்டது என்பதை அறிந்து…. செயல்படுங்கள்….

என் நட்பு வட்டத்தில் இருக்கும் அத்தனைப்பேருமே நல்ல நட்பு மட்டுமல்ல…. நம்பிக்கையான நட்பும் கூட….

எந்த ஒரு ரத்த சம்மந்தம் இல்லாது உயிராய்… நம்பிக்கையாய்…நேர்மையாய்… இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நட்பு தின நல்வாழ்த்துகள்….

நட்பு என்றால் நம்பிக்கை

நம்பிக்கை என்றால் நட்பு….
Related Posts Plugin for WordPress, Blogger...