"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 31, 2011

வரவேற்போமா 2012 அன்புடன்?

2011  முடிந்து 2012  ஆரம்பிக்க போகிறது…

எல்லோர் வலைப்பூவிலும் அழகழகாய் வாழ்த்துகளும் அன்பு நிறைந்த கருத்து செரிவுள்ள நல்லவைகளும் பார்த்து மனம் நிறைந்தது…

சரி நாமும் எதுனா எழுதுவோமே என்று ஆரம்பித்தால் மனம் அமைதியாக இருக்கிறது… நினைவுகள் இல்லா அமைதி…. ஆழ்ந்த அமைதி… ஒரு நாள் முன்புவரை கூட மனம் ஒரு போராட்டத்துடன் துடித்துக்கொண்டு வெளியே சிரித்துக்கொண்டு பணியிடத்தில் வேலைகள் நடந்துக்கொண்டு வாழ்க்கை நகர்ந்துக்கொண்டு தான் இருந்தது…

தினம் தினம் வரும் மெயிலில் இதோ இப்போது நான் பார்க்கும் அத்தனை அன்பு உள்ளங்களிடமிருந்து மெயில்கள் வந்தவண்ணம்…. என்னப்பா எப்ப வரப்போறீங்க எங்க தளத்துக்கு? உங்க பதிவும் பின்னூட்டமும் இல்லாம ஹுஹும் நல்லாவே இல்லையே’ என்ற அன்பு விசாரிப்பும்….

அக்கா இதுவும் கடந்து போகும் கவலைப்படாதீங்க.. எல்லாம் சரியாகும் என்று சிலர், மஞ்சு நீங்க அப்படியே சோர்ந்து உட்கார்ந்தால் கவலைகள் உங்களை எழவிடாமல் தடுக்கும்… கொஞ்சம் அப்டியே வலைப்பூவுக்கு வாங்க, எங்க படைப்புகள் படிங்க…. மனசு கண்டிப்பா லேசாகும்னு சொல்லும் சிலர்,

அன்பு விதைத்தாலும் நஞ்சை ருசிக்க தரும்போது மனம் அதிர்ச்சியாகிறது தான்…. ஆனால் அதுவும் இறைவன் தரும் பிராசதமாய் எடுத்துக்கோ மஞ்சு… கடவுள் எதுவும் காரணத்தோடு தான் செய்வார் என்பதை புரிஞ்சுக்கோ அப்டின்னு பாட்டி லெவலுக்கு எனக்கு அன்பான அறிவுரை சொல்வா என் தங்கை ( என் தாய் என்று சொன்னால் இன்னும் பொருத்தமா இருக்கும் )

எத்தனை புண்ணியம் செய்திருப்பேன் போன பிறவியில்…
என்னவா பிறந்திருப்பேனோ….
நல்லது செய்தேனா? செய்ததனால் இப்பிறவியா?

நல்ல தாய், என்னை உயிராய் காக்கும் என் தங்கை, என்னை குழந்தையாய் பார்த்துக்கொள்ளும் என் அன்பு கணவர், என் மேல் அன்பை பொழியும் என் பிள்ளைகள்….

இதெல்லாம் தான் என்னை இத்தனை கட்டிப்போட்டுவிட்டதா?

குண்டு சட்டில குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்னு சொன்னால் இன்னும் பொருத்தமா இருக்கும்… ஆமாம் சின்ன வட்டத்துக்குள் அன்பை விதைத்து அன்பையே உழுது அன்பையே அறுவடை செய்து அன்பையே உண்டு அன்பையே பகிர்ந்து நிறைந்த அன்பை மனதில் நிறைத்துக்கொள்கிறேன்…

இடையில் நடந்தவை எல்லாம் மறக்கமுயல்கிறேன். இறைவன் எப்பவும் சந்தோஷம் மட்டுமே தருவார்னு எதிர்ப்பார்ப்பது தப்பில்லையா? சோதனைகளும் தருவார் தானே? சந்தோஷம் தரும்போது துள்ளிக்குதித்து சோதனைகள் வரும்போது சோர்ந்து விழுந்து எழமுடியாமல் ஏன் வதைத்துக்கொள்கிறேன்..

என்னை வேண்டாம் என்பவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்…
என் நட்பு தீயாய் தகிக்கிறது என்று ஒதுங்கியோருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்….

மாறாமல் இன்னும் அதே அன்புடன் இருக்கும் காலம் வரை நல்லவை கண்டு நல்லவை பேசி நல்லதைக்கேட்டு நல்லதையே தருவோமே…

முத்தமிழ்மன்றம், ஈகரை, தமிழ்த்தோட்டம், நிலாமுற்றம், தமிழ்மன்றம் இப்படி சில தமிழ் தளங்கள் சென்றிருக்கேன்.. சென்ற இடத்திலெல்லாம் நல்லவரையே  நல்ல உள்ளங்களையே கண்டேன்…

இதோ இங்கு ஒவ்வொரு வலைப்பூவிலும் நான் செல்லும்போது அன்புடன் தோளணைக்கும் தாயன்பு நிறைந்த அன்பையே ஒவ்வொரிடமும் காண்கிறேன்….

இந்த அன்பு என்னை சோர்ந்து போக விடாமல் காத்ததை நன்றியுடன் நினைத்துக்கொள்வேன்….

இனி வரும் புதுவருடத்தில் மனதில் ஒரு உறுதி எடுத்துக்கொள்கிறேன்…

  1.   என் மனம் புண்படும்படி இனி யார் எப்படி பேசினாலும் செயல்களால் காண்பித்தாலும் பதிவுகளால் தாக்கினாலும் அமைதியாக ஒதுங்கி விடுவேன்.
  2.  யார் மனமும் புண்படும்படியான எந்த சொல்லும் சொல்லமாட்டேன், பதிவும் நான் இடமாட்டேன்.

எல்லோருக்கும் என் மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள்பா….
Related Posts Plugin for WordPress, Blogger...