சோயா பனீர் ட்ரை மஞ்சுரியன்
தேவையான பொருட்கள்
சோயா
பனீர் துண்டுகள்
கறிவேப்பிலை
பச்சை மிளகாய்
மிளகாய் தூள்
ஆரஞ்ச் கலர்
உப்பு
தயிர்
இஞ்சி
பூண்டு
மசாலா பௌடர்
எலுமிச்சம்பழம்
சோள மாவு
மைதாமாவு
அரிசிமாவு
ஸ்ப்ரிங் ஆனியன்
பொரிக்க எண்ணை
செய்முறை
சோயா மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு பத்து நிமிடங்கள் ஊறவைத்து அதன்பின்னர் குளிர்ந்த நீரில் 4 அல்லது 5 முறை கழுவிப்பிழிந்து ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு வைக்கவும். பனீர் துண்டுகள் அதில் போட்டுக்கொள்ளவும். அதில் இஞ்சிப்பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மசாலாப்பௌடர் ( பட்டை கிராம்பு ஏலக்கா சோம்பு அன்னாசி மொக்கு பொடித்தது) பச்சை மிளகாய் நீளமாய் நறுக்கி அதில் போட்டுக்கொள்ளவும். கறிவேப்பிலை கழுவி அதையும் அப்படியே அதில் போட்டுக்கொள்ளவும். தயிர் ஊற்றிக்கொள்ளவும் உப்பு எலுமிச்சம்பழ ரசம் எல்லாம் போட்டு மைதா மாவு கொஞ்சம், அரிசிமாவு கொஞ்சம், சோளமாவு கொஞ்சம் எல்லாமும் போட்டு பிசிறி 2 மணி நேரம் ஊறவைத்து எண்ணை கடாயில் ஊற்றி ஸ்டவ் சிம்மில் வைத்து கொஞ்சம் கொஞ்சமக பொரித்து எடுத்து வைக்கவும்... ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணை ஊற்றி பச்சைமிளகாய் பொடியாய் நறுக்கினது ஸ்ப்ரிங் ஆனியன் பொடியாய் நறுக்கினது போட்டு உப்பு போட்டு வதக்கி பொரித்ததை போட்டு ஒரு புரட்டு புரட்டி இறக்கி சாப்பிடவும் சூடா.. செம்ம டேஸ்ட் தெரியுமாப்பா?
Tweet |
அடடா...! தட்டிலே இருக்கிறத அப்படியே சாப்பிடலாம் போலிருக்கே... ஹிஹி...
ReplyDeleteஉங்களின் செய்முறைப்படி செய்து பார்க்கிறோம்... நன்றி...
அப்படியே சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்பா.. :)
Delete"மஞ்சு" ரியன் என்பதால் பிரியமாக வெளியிட்டு விட்டீர்களோ மஞ்சு? :))
ReplyDeleteஹை என் பேர்ல இருப்பதால் தான் :) வெளியிட்டேன்பா.....
Deleteஅக்கா அருமையாக இருக்கிறதே செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.
ReplyDeleteசெய்து சாப்டுட்டு சொல்லு சசி :)
Deleteவித்தியாசமான இதுவரை அறியாத ரெசிபி
ReplyDeleteபகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்
எனக்கும் இதைப்பற்றி ஒரு ஐடியாவும் இல்லை ரமணி சார். திடிர்னு ஒரு நாள் மாலை இப்படி செய்தா என்னன்னு செய்து பார்த்தேன். செம்ம ருசி...
Deleteஅன்பு நன்றிகள் ரமணி சார்.
ReplyDeleteநாளை மாலை இதுதான் ஸ்நாக் !
ReplyDeleteபார்க்கவே ஜோரா இருக்கு!!
மஞ்சு செஞ்ச மஞ்சுரியன் = அருமை..!
ReplyDeleteஅருமையான ரெசிபியா இருக்கும் போல தெரிகிறது. செய்து பார்த்துடலாம்.
ReplyDeleteசெய்முறையைப் பார்க்கும் போதே புரிந்துகொண்டேன் அக்கா
ReplyDeleteநிட்சயம் சுவையும் அதிகமாகத்தான் இருக்க வேண்டும் என்று .
மிக்க நன்றி அக்கா பகிர்வுக்கு.த .ம.5
சரிசரி... சசி செஞ்சு சாப்ட்டுட்டு நல்லா இருக்குன்னு சொன்ன அவுங்க வீட்டுக்கே போய் சாப்ட்டுப் பாத்துற வேண்டியதுதான்...! படத்தப் பாத்தாலே சாப்பிடற ஆசை வரத்தான் செய்யுது.
ReplyDeleteவரும்போது எனக்குக் கொண்டுவா மகளே!
ReplyDeleteசெஞ்சே தரேன் அப்பா உங்களுக்கு இல்லாததா....
Deleteசுவையும் சத்துமான ஒரு ரெசிபி மேடம். இதோடு காளானும் கூட சேர்க்கலாம்... இன்னும் புரதம் நிரம்பிய ஒன்றாக மாறும்.
ReplyDeleteகாளான் வாங்கி வைத்திருக்கிறேன் தீபப்ரியா :) முதலில் காளான்ல தான் சாப்பிட்டோம். அதில் இருந்து உருவானது தான் சோயா ;)
Deleteஆஹா...படத்தை பார்த்ததுமே பசி எடுக்க ஆரம்பிச்சிடுச்சே !
ReplyDeleteநாங்க மதிய லஞ்சுக்கு உங்க ஹோட்டலுக்கு வரலாம்னு பார்த்தா என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க? :)
Deleteபடத்தைப் பார்த்தாலே சாப்பிடனும்னு தோணுதே...
ReplyDeleteஅப்டியே சாப்பிடுங்கப்பா சரவணா :)
Deleteஅருமையான மஞ்சுரியன் மஞ்சு.
ReplyDeleteஆஹா மேம் :)
Delete