"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, August 25, 2012

சோயா 65 சாப்பிடுவோமா?

சோயா - 65

அதென்ன எப்ப பார்த்தாலும் சிக்கன் 65?? நான்வெஜ் சாப்பிடாதவங்க சாப்பிடறமாதிரி எதுனா செய்து பார்க்கலாமா? புதுசு புதுசா எதுனா செய்து அதுக்கு ஒரு பேரும் வெச்சு சமைச்சு ஆத்துக்காரருக்கு கொடுத்து அவர் அதை வாயில் போட்டு முழுங்குமுன்னாடி முன்னூறு முறை நல்லாருக்கா நல்லாருக்கான்னு கேட்டு உயிரெடுத்து நல்லாருக்குன்னு சொன்னது தான் தாமதம்... உடனே இங்க போட்டுட்டா என்ன யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்னு ஒரு நல்ல எண்ணத்தால ( நிஜம்ம்ம்ம்ம்மா தாம்பா நம்புங்க) போட்டுட்டேன்... படிங்க. சமைச்சு பாருங்க... சாப்பிட்டு நல்லாருந்தா சொல்லுங்க சரியாப்பா?

தேவை

ஊறவைத்த சோயா மீல்மேக்கர், இஞ்சிபூண்டு விழுது, காரப்பொடி, உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை , க்ரிஸ்பியா இருக்க கொஞ்சூண்டு அரிசிமாவு, எலுமிச்சை ஜூஸ் ரெண்டு டேபிள் ஸ்பூன், பொரிக்க எண்ணை..

செய்முறை...






மீல்மேக்கரை நல்லா கழுவிட்டு ஒரு மணி நேரம் நீர்ல ஊறவெச்சுட்டு அதை பிழிஞ்சு ஒரு பாத்திரத்தில் போட்டுக்கோங்க. அதுல உப்பு, காரம், மஞ்சள் தூள், இஞ்சிபூண்டு விழுது, கறிவேப்பிலை, எலுமிச்சை ஜூஸ், அரிசிமாவு எல்லாம் போட்டு பிசிறிவெச்சிட்டு ஒரு மணி நேரம் ஊறவெச்சிட்டு கடாய்ல எண்ணை ஊற்றி இதை கொஞ்சம் கொஞ்சமா போட்டு பொரிச்சு எடுத்து தட்டுல அடுக்கி சூடா சாப்பிட்டு பாருங்க... எப்டி இருக்கு? நல்லாருக்கு தானே??


24 comments:

  1. இது புசுசா இருக்கே... செஞ்சு பார்த்துடுவோம்...

    சோயா 65 - பேரும் நல்லாத்தான் இருக்கு!

    ReplyDelete
  2. நீண்ட நாட்களுக்குப்பின் அருமையான சுவையான உணவு பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. சுவையான படைப்பு

    ReplyDelete
  4. அட, இப்போதான் அமைதிச்சாரல் பக்கத்துல சூரா பார்த்துட்டு வந்தேன்... இங்கே அடுத்த டிப்ஸ்.... செஞ்சுடலாம். நன்றிங்கோ...!

    ReplyDelete
  5. //வெங்கட் நாகராஜ் said...
    இது புசுசா இருக்கே... செஞ்சு பார்த்துடுவோம்...

    சோயா 65 - பேரும் நல்லாத்தான் இருக்கு//

    வாங்க வெங்கட் சௌக்கியமா? செய்து சாப்பிட்டுட்டு சொல்லுங்கோ...

    ReplyDelete
  6. //இராஜராஜேஸ்வரி said...
    நீண்ட நாட்களுக்குப்பின் அருமையான சுவையான உணவு பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்.//

    ஹைஈஈஈ ராஜேஸ்வரி எப்படி இருக்கீங்க? ஆமாம்பா ரொம்பவே நாளாகிட்டுது...அன்பு நன்றிகள்பா..

    ReplyDelete
  7. //கவி அழகன் said...
    சுவையான படைப்பு//

    அன்பு நன்றிகள் கவி அழகன்.

    ReplyDelete
  8. //
    ஸ்ரீராம். said...
    அட, இப்போதான் அமைதிச்சாரல் பக்கத்துல சூரா பார்த்துட்டு வந்தேன்... இங்கே அடுத்த டிப்ஸ்.... செஞ்சுடலாம். நன்றிங்கோ...!//

    அட அப்படியா ரொம்ப சந்தோஷம் ஸ்ரீராம்... செய்து சாப்பிட்டுட்டு சொல்லுங்கோப்பா..

    ReplyDelete
  9. வாங்க சுபாஷிணி
    அருமையான புதுமையான ரெஸிபியுடன்
    வெகு நாட்களுக்குப்பின்
    மீண்டும் களம் இறங்கியுள்ள உங்களை
    வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்
    தொடர வழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நீண்ட நாட்களுக்குப்பின் வருகை.
    ருசியுடன் ஓர் பகிர்வு. அருமை.

    மகிழ்ச்சி.

    ReplyDelete
  11. செஞ்சு கொடுத்தா சாப்பிட்டு விட்டுச் சொல்லும் கூட்டம் ஒன்று இருக்குமானால் அதிலே நான் தான் தலீவரு.. ஆகையால அந்த ஊருல செஞ்சு இந்த ஊருப்பக்கம் வேகமா அனுப்புங்க தாயீ..!

    வயிற்றுப் பசியோடு,

    ReplyDelete
  12. //Ramani said...
    வாங்க சுபாஷிணி
    அருமையான புதுமையான ரெஸிபியுடன்
    வெகு நாட்களுக்குப்பின்
    மீண்டும் களம் இறங்கியுள்ள உங்களை
    வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்
    தொடர வழ்த்துக்கள்//

    ஆஹா ரமணி சார் சென்னைல தானே இருக்கீங்க? ரொம்ப சந்தோஷம் எனக்கும்....

    ReplyDelete
  13. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    நீண்ட நாட்களுக்குப்பின் வருகை.
    ருசியுடன் ஓர் பகிர்வு. அருமை.

    மகிழ்ச்சி//

    அன்பு நன்றிகள் ஜிகே சார்... சௌக்கியமா நீங்க?

    ReplyDelete
  14. //சிவஹரி said...
    செஞ்சு கொடுத்தா சாப்பிட்டு விட்டுச் சொல்லும் கூட்டம் ஒன்று இருக்குமானால் அதிலே நான் தான் தலீவரு.. ஆகையால அந்த ஊருல செஞ்சு இந்த ஊருப்பக்கம் வேகமா அனுப்புங்க தாயீ..!

    வயிற்றுப் பசியோடு//
    அட தம்பி உனக்கு இல்லாமலா?
    எடுத்து வெச்சிருக்கேன் வாடா வீட்டுக்கு செஞ்சு தரேன்...

    ReplyDelete
  15. ரொம்ப நாளைக்கு அப்புறமா அசத்தலா வந்துருக்கீங்க வாழ்த்துகள் மேடம்...!

    ReplyDelete
  16. பேரும் நல்லாத்தான் இருக்கு, இனி டேஸ்ட் பண்ணிப்பார்த்துட்டு சொல்றேன்...!

    ReplyDelete
  17. பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  18. //MANO நாஞ்சில் மனோ said...
    ரொம்ப நாளைக்கு அப்புறமா அசத்தலா வந்துருக்கீங்க வாழ்த்துகள் மேடம்...!

    MANO நாஞ்சில் மனோ said...
    பேரும் நல்லாத்தான் இருக்கு, இனி டேஸ்ட் பண்ணிப்பார்த்துட்டு சொல்றேன்...//

    நினைவு கூர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மனோ சௌக்கியமாப்பா?

    சமைச்சுட்டு அதை பார்த்துட்டு அதன்பின் சாப்ட்டுட்டு சொல்லுங்க மனோ :) மீன் முள் கணக்கா மாத்தி சொல்லிர போறீங்க...

    அன்பு நன்றிகள் மனோ பகிர்வுக்கு....

    ReplyDelete
  19. //அன்பு உள்ளம் said...
    பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள் தோழி //

    அன்பு வரவேற்புகள் தோழி... தங்கள் கருத்து பகிர்வுக்கு அன்பு நன்றிகள்...

    ReplyDelete
  20. சுலபமான செய்முறையா இருக்கே...

    புதுவகை உணவு செய்து பார்த்திட வேண்டியதுதான்.

    ReplyDelete
  21. //சே. குமார் said...
    சுலபமான செய்முறையா இருக்கே...

    புதுவகை உணவு செய்து பார்த்திட வேண்டியதுதான்.//

    ஆமாம் குமார் அதிக சமயமும் எடுக்காது.. அரைமணி நேர வேலை தான்... செய்து சாப்பிட்டு சொல்லுங்கப்பா..

    ReplyDelete
  22. ஹை...வித்தியாசமா இருக்கே அக்கா...சூப்பரு... நானும் செஞ்சு பார்க்கறேன்.
    இனி புதுசா ஞாயிற்றுகிழமைல சமச்சு கத்துக்கனும்னு நினைச்சு போன‌ ஞாயிறுதான் வெஜ் ரோல் பண்ணினேன். அடுத்த ஞாயிறுக்கு அக்காவோட ரெசிபிதான் கைகொடுக்க போகுது. நன்றி அக்கா!

    ஹும்ம்ம்...சிக்கிரம்... சிக்கிரம் இன்னும் புதுசு புதுசா கண்டுபிடிங்க...

    ReplyDelete
  23. என்னை மாதிரி சைவ பட்சிணிகளுக்கு சைவத்துலயே அசைவம் சாப்ட்ட எஃபெக்ட் கிடைச்சுடும் போலருக்கே... ட்ரை பண்ணிப் பாத்துடறேன் நிச்சயமா.

    ReplyDelete
  24. இங்கு என் முதல் வருகை. சூப்பரா ஒரு அசத்தல் ரெசிப்பி. அவசியம் செய்து பார்க்கிறேன். டைம் கிடைக்கும் போது இங்கு வந்து பாருங்க.
    நன்றி வலைசரம்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...