"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, May 5, 2010

உயிர்வலி....

மனம் மரத்து தான் போகிறது
உயிர்விடும் வழி தேடுகிறது
வலியும் வேதனையும் கூடுகிறது
வேண்டாததை நினைக்க வைக்கிறது

சம்மட்டி அடி இதயத்தில் அறைகிறது
உடம்பு மேலும் கனத்து போகிறது
உயிர் உடலை துறந்துவிட
மனதிடம் பேராசையோடு யாசிக்கிறது

திருவிளையாடல் இவ்வளவுதானா?
இறைவனை நோக்கி தொழுகிறது
கைகள் பின்னப்பட்ட நிலையிலும்
முறையிட்டு அழுது தொலைக்கிறது

பண்பட்ட மனதாயிருக்க முயல்கிறது
முடியாததால் கண்ணீர் கரைபுரள்கிறது
இனியும் உயிரோடு இருக்கப்பிடிக்காது
உயிர்வலி போகும்வரை கதறிதீர்க்கிறது

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...