"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, May 5, 2010

மூச்சு நின்றுவிடுமுன்...

காக்கவைத்து என்னை
வேதனைப்படுத்தாதே
நொடிகள் நிமிடங்களாகி
நிமிடங்களும் இதோ
கரைந்துக்கொண்டே....

காத்திருக்கும் நேரமெல்லாம்
மனதைக் கொத்தும்
உன் நினைவுகளை
இதமாய் கோதிவிடுகிறேன்

இனியவையும் உண்டு
வருந்தியவையும் உண்டு
விளையாட்டாய் நாம்
பிணங்கியதும் உண்டு

உன் நினைவுகளை உண்டு
அவை தீருமுன் நீயும்
என்னெதிரே வந்துவிடு

காக்கவைத்து என்னை
வெற்றிக்கொள்ள நினைக்காதே

உன்னைக் காணாது தவித்து
என் மூச்சு நின்றுவிடுமுன்
வந்துவிடுவாய் தானே?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...