"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, September 10, 2011

கதை 15. ரம்ஜான் பரிசு

கதை 15.  ரம்ஜான் பரிசு



"அண்ணா நான் வேலைக்கு போகலாம் என்று இருக்கேன் “ மெல்ல தொடங்கினாள் ஃபாத்திமா.

"ஏன் இப்ப அதுக்கென்ன அவசரம் வந்திச்சாம்? "ஃபாத்திமாவின் மூத்த அண்ணன் ஷரீப்

"என்னால் முடிந்த அளவு கொஞ்சம் உதவலாமே உங்களுக்கு என்று தான் அண்ணா...."

"ஓஹோ தங்கச்சிக்கு கல்யாணம் செய்துவைக்க துப்பில்லாதவன்னு நீயே சம்பாதிக்க ஆரம்பிக்கிறியா?"

"இல்லன்னா லாக் அவுட் செய்து வேலைக்கு போகாம நீங்க வீட்டில் இருந்துக்கொண்டு ராத்திரி ஆனால் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து குழந்தைகளையும் அண்ணியையும் இம்சிப்பதை பொறுக்க முடியாமல் தான்..".  எனச் சொல்ல
நினைத்தவள்  சொல்லவில்லை 

"சரி சரி எவ்ளவு சம்பளமாம்?" சிகரெட்டை உதட்டில் பொருத்தியவாறே கேட்டான் ஷரீப்

"முதலில் 6000 ரூபாய் தருவார்களாம்... பின்னர் என் வேலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து மேலும் உயர வாய்ப்பிருக்கு."

இதெல்லாம் தூரத்தில் துணி தைத்துக்கொண்டே ஷரீப் மனைவி மீனாள் (காதலித்து மணந்தவள்) முணுமுணுத்தாள்... சம்பாதிக்க துப்பு இல்லன்னாலும் குடும்பத்தை காப்பாத்த ஒரு ஜீவன் வெளியே உழைக்க போனால் ஆயிரத்தெட்டு கேள்விகள்..

ஃபாத்திமாவின் இரண்டாவது அண்ணன் பஷீர் பணக்கார இடத்தில் பெண்ணை மணந்து வீட்டுக்கு மாப்பிள்ளையாகி இவர்கள் ஞாபகங்களில் கூட தப்பித் தவறி வராது இருந்துவிட கவனமாக இவர்கள் கண்களில் கூட படுவதே இல்லை.

முதல் நாள் வேலைக்கு போகும் ஃபாத்திமாவுக்கு டிபன் பாக்சில் தயிர்சாதத்தை அன்பையும் சேர்த்தே குழைத்து தொட்டுக்கொள்ள உப்பிலிட்ட நார்த்தங்காய் ஊறுகாய் வைத்து அனுப்பினாள் மீனாள்.

"குடும்பத்தை காக்க வேறு வழி இல்லாததால் மட்டுமே நீ வேலைக்கு போக நான் சம்மதிக்கிறேன் ஃபாத்திமா.. மற்றபடி நான் உன் அண்ணி இல்லை... என் குழந்தைடா நீ "என்று சொல்லி அன்புடன் நெற்றியில் முத்தமிட்டாள்...

"எனக்கு தெரியாதா அண்ணி உங்களை.... நீங்க என்னிக்குமே என் தாய் தான்..".

"அம்மா என்னை பெற்றுவிட்டு கண்மூடியபோது உங்கள் முகம் பார்த்து தான் முதலில் நான் அழுததாக வாப்பாவே சொல்லி இருக்கார் அண்ணி "என்று கண்ணீர் துளிர்க்க மீனாள் அறியாது கண்ணை துடைத்துக்கொண்டாள்.

முதல் நாள் அதுவும் நேரத்திற்கு ஆபிசுக்கு போகவேண்டுமே என்று அரக்க பரக்க செருப்பை போட்டுக்கொண்டு பஸ் பிடிக்க. ஓடினாள்

ஆபிசில் நுழையவும் மணி சரியாக ஒன்பது அடித்தது.

புதிதாக சேர்ந்திருந்தாலும் டெலிபோன் ஆபரேட்டர் வேலை மட்டுமல்லாது செகரெட்டரி வேலையும் கற்று தேர்ந்திருப்பதால் அவளுக்கு வேளையைக்  கற்பதென்பது  மிகவும் எளிதாக வே  இருந்தது 

மாலை வேலை முடிந்ததும் பஸ்ஸில் ஏறியதும் உட்கார இடம் கிடைக்கவே உட்கார்ந்ததும் கண்ணை மூடியதும் தன் பால்யக் கால நண்பன் ரமேஷ் ஞாபகம் வந்தது. இப்போது எப்படி இருப்பான் என்று நினைத்தாள்....

பள்ளி நாட்களில் இருவரும் ஒன்றாய் பள்ளிக்கு போனதும், எப்போதும் வகுப்பில் முதலில் வரவேண்டும் என்று இருவரும் போட்டி போட்டுக்கொண்டு படித்ததும்.... எல்லா ஆசிரியர்களுக்குமே இருவரும் செல்லப்பிள்ளைகள் ஆனதும்.... வீட்டில் இருந்து கொண்டு வரும் சாப்பாட்டை இருவரும் பகிர்ந்து உண்டதும்.. ரம்ஜான் நோன்பு இவளுக்காக ரமேஷும் சேர்ந்து இருந்ததும் அவனுடைய பூணூல் கல்யாணம் சாப்பாட்டை அவன் ஆசையுடன் கொண்டு வந்து இவளுக்கு கொடுத்ததும்... இருவரின் நட்பு பிடிக்காமல் இரு குடும்பமும் அடித்துக்கொண்டதும் தாறுமாறாய் வார்த்தைகளை வீசிக்கொண்டதும் பின் தன் இனிய நண்பன் ரமேஷ் குடும்பத்துடன் ஊரை விட்டு போனதும் தான் மிகவும் தனிமையானது எல்லாம் நினைவுக்கு வந்தது.... மூடியிருந்த கண்களில் கண்ணீர் நிறைந்தது..

நாளை முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கவேண்டும்... அதற்கான ஆயுத்தங்களில் வீடு தயாராகிக் கொண்டு இருந்தது.

வீட்டில் நுழையும்போது எதிர்வீட்டில் யாரோ வந்ததன் அடையாளமாக எதிர்வீடு நிறைந்து இருந்தது..

"என்ன அண்ணி எதிர்ல வீடு ஒரு வருஷமா பூட்டியே இருந்ததே "என்று கூறிக்கொண்டே கைப்பையை வைத்துவிட்டு முகம் கை கால் கழுவ போனாள் ஃபாத்திமா...

"எதிர்வீட்டில் வந்திருப்பது யாருன்னு தெரியுமா "என்று மீனாள் கேட்டாள்.

"இப்ப தானே அண்ணி கூட்டம் நிறைந்திருப்பதை பார்த்தேன்... தெரியலையே "என்று சொல்லிக்கொண்டே முகம் கழுவிக்கொண்டு வந்து தொழுகை செய்ய பாய் விரித்தாள்..

"ரமேஷ் குடும்பம் தான் வந்திருக்கிறது ஃபாத்திமா... ரமேஷ் வெளியூரில் மாதம் 2 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து கொண்டு இருந்திருக்கிறான்... இப்ப அவனுக்கு ரெண்டு கிட்னியும் ஃபெயிலியர் ஆனதால் இங்க ஊருக்கே வந்திருக்காங்க... அவனுக்கு கிட்னி கொடுக்க அவன் சொந்தங்களே முன் வராத நிலையில் வயதான காரணத்தால் ரமேஷின் தாய் தந்தையருக்கு பிபி சுகர் கொலஸ்ட்ரால் இருக்கும் காரணத்தாலும் முதுமையின் காரணத்தாலும் கிட்னி கொடுக்க இயலாது என்று டாக்டர் சொல்லிவிட்டாராம். ரமேஷ் முகத்தை பார்க்கவே முடியவில்லை" என்று மீனாள் சொன்னதும் அதிர்ந்தாள் ஃபாத்திமா..

என் நண்பன் உயிராய் இருந்த நண்பன் வந்திருக்கிறானா... சந்தோஷம் ஒரு பக்கமும் உயிருக்காக போராடும் நிலையில் வந்திருக்கும் நண்பனைப் பார்க்கத் துடித்த மனதை கட்டுப்படுத்தினாள். தொழுகையை முடித்தாள் அமைதியாக. நாளை முதல் தொடங்கும் ரமதான் நோன்பு எந்த தடையும் இல்லாமல் நல்லவிதமாக நடக்க மானசீகமாக வேண்டினாள். ரமேஷின் உயிரை காக்க இறைந்தாள்...

தொழுகையை முடித்துவிட்டு எதிர்வீட்டுக்கு ஓடினாள் ஃபாத்திமா...

ரமேஷின் அன்னை விளக்கேற்றிக்கொண்டிருந்தார்.

யாரோ நுழையும் சப்தம் கேட்க திரும்பி பார்த்த மீனாட்சி, “ நீங்க யாருன்னு தெரியலையே “ என்று கண் இடுங்க பார்த்தாள்.

"நான் ரமேஷின் சிறுவயது பள்ளித் தோழி ஃபாத்திமா" என்று சொல்லி கை கூப்பினாள்.

உடனே மீனாட்சி அவள் கைகளை பிடித்துக்கொண்டு கதறினாள்.

"உன்னிடமிருந்து என் மகனை பிரித்தேன்.. உங்கள் நட்பை பிரித்து அவனை எங்கோ கூட்டிக்கொண்டு போனேன். இப்ப உயிரையாவது இந்த மண்ணில் விட அனுமதி கொடுங்க அம்மா என்று என் மகன் என் கால் பிடித்து கதறும்போது என் இதயமே நின்றுவிடும் போலிருக்கிறதும்மா.. இவன் கூடப்பிறந்தவர்களுக்காக உழைத்து இவன் அனுப்பின காசில் படித்து கல்யாணம் செய்து சந்தோஷமாக குடும்பமாக இருக்கும் இவன் தங்கைகள் தம்பிகள் ரமேஷுக்கு இப்படி ஆனதுக்கு கிட்னி தரமுடியுமான்னு கேட்டதுக்கு அப்புறம் அவர்களிடம் இருந்து எந்த ஒரு போனோ தகவலோ இல்லம்மா..."

ரமேஷ் சொல்றான், “ இனி என் உயிராவது நிம்மதியானம் மண்ல போகட்டும்மா .... யாரையும் எதுவும் கேட்கவேணாம்னு சொல்லிட்டான்மா "என்று அழுதார்.

"மாமா எங்கே "என்று கேட்டுக்கொண்டே சுற்றுபுறம் பார்த்தாள்.. இருமும் சத்தம் ஒரு அறையில் இருந்து கேட்கவே அங்கே போய் பார்த்தபோது எலும்புக்கூடாய் ஒரு உருவம் கட்டிலில் படுத்திருப்பதை பார்த்து பதறி ஓடினாள்.

கட்டிலின் அருகே ரமேஷின் வயதாகி தளர்ந்த தந்தை அமர்ந்து அழுதுக்கொண்டிருந்தார்.

"மாமா கவலைப்படாதீங்க. நீங்களும் நானும் அத்தையும் விடாது பிரார்த்திப்போம். நாளை முதல் ரம்ஜான் நோன்பு இருக்கிறேன் என் நண்பனுக்காக" என்று அழுதுகொண்டே கூறினாள்.

ஃபாத்திமாவின் குரல் கேட்டு கண்விழித்தான் ரமேஷ்.. இடுங்கிய கண்களுடன் ஃபாத்திமாவை பார்த்தான்.

நெடுநாட்கள் காணாதிருந்து கண்ட நண்பர்களின் தூய நட்பு அங்கே கண்ணீராய் கரைந்ததை மாடத்திலிருந்த விளக்கு மங்கிய ஒளியுடன் தானும் ஒரு சாட்சியாய் பார்த்துக்கொண்டு இருந்தது.

"ரமேஷ் அழாதே டா... உயிர் விட வந்த உன்னை உயிரோடு திரும்ப நான் பார்ப்பேன்.. நம்பு" என்று உறுதியுடன் சொல்லி அவன் கண்களை துடைத்தாள்.

இந்த அருமையான பெண்ணை எத்தனை கேவலமாக பேசி விரட்டினோம் என்று ரமேஷின் பெற்றோர் கண்ணீருடன்  ஃபாதிமாவிடம்  மன்னிப்பு கேட்டு கைகூப்பினர்

ஃபாத்திமா பதறி அவர்கள் கைகளை விலக்கி "அத்தை மாமா நீங்க பெரியவங்க. நீங்க ஆசி தான் கொடுக்கனும். கைக்கூப்பக்கூடாது."என்றாள்

"நாளை நானும்  ஆஸ்பிடலுக்கு வருகிறேன் "என்று கூறி நம்பிக்கையை  விதைத்துவிட்டு வந்தாள்.

"எத்தனை நல்லபெண் பார்த்தியா மீனாட்சி... நம்ம மகன் பிழைப்பானோ இல்லையோ எனக்கு தெரியாது.. பணத்தை கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்காத நல்ல உள்ளத்தை நம் மகன் நட்பாக கொண்டுள்ளான். இனி அவன் நிம்மதியாக மூச்சை இங்கே மண்ணுக்கு சொந்தமாக்கட்டும்" என்று பெருமூச்சுடன் படுக்கப் போனார்.

மறுநாள் மாலை ஆபிசு முடிந்ததும் ஆஸ்பிடலுக்கு புறப்பட்டனர். "டாக்டர் சொன்னார் யாராவது கிட்னி டோனர் கிடைத்தால் அதுவும் இந்த இருபது நாட்களுக்குள் கிடைத்தால் ஆபரேஷன் வைத்துக்கொள்ளலாம். சொந்தததில் கொடுத்தாலும் சரியே..". ஃபாத்திமா அப்போது டாக்டரிடம் , “ இடையில் நான் குறுக்கிடுவதற்கு மன்னிக்கனும் டாக்டர்” நான் என் நண்பனுக்காக கிட்னி தரலாமா "என்றபோது அதிர்ச்சி விலகா கண்களுடன் ரமேஷ் உள்பட குடும்பமே பார்த்தது ஃபாத்திமாவை.

டாக்டர் ஃபாத்திமாவை யாரென்று விசாரிக்க..." சிறுவயது தோழி நான் இவனுக்கு "என்று ரமேஷின் தோள் அழுத்தி சொன்னாள். அந்த அழுத்தலில் யாமிருக்க பயமேன் என்பது போல் இருந்தது.

டாக்டர் ,” இங்கே பாரம்மா உன் அருமையான உதவும் எண்ணம் சந்தோஷம் தரக்கூடியதே. ஆனால் உன் கிட்னி அவருக்கு ஒத்துப்போனால் மட்டுமே தான் மாற்ற முடியும். அதுக்கும் நிறைய டெஸ்டுகள் இருக்கு.."

"டாக்டர் என் நண்பனுக்காக உயிரையே தருகிறேன் என்று முன்வரும் என்னை அல்லா ஏமாற்றமாட்டார். ஒரு கிட்னியுடன் ஆரோக்கியமாக என்னால் யதார்த்த வாழ்க்கை வாழமுடியும்போது ஒரு கிட்னி நான் என் நண்பனுக்காக தரமுடியும். அல்லா கண்டிப்பாக என்னுடையதை என் நண்பனுக்கு பொருந்துமாறு செய்வார். நட்பு எதையும் தாங்கும். நட்பு எதையும் செய்யும். என்பதை நான் சொல்லித்தானா தெரியனும் டாக்டர்" என்றாள் ஃபாத்திமா..

ரமேஷின் தந்தை தாய் இருவரும் ஒரு சேர ஃபாத்திமாவின் காலில் விழப்போனபோது பதறி விலகினாள் ஃபாத்திமா...

சந்தோஷத்துடன் நம்பிக்கையோடு உயிரை காக்கும் தெய்வமாக கண்முன் தெரியும் தேவதையாக ஃபாத்திமாஅவர்கள் கண்களுக்குத் .தெரிந்தாள் 

அடுத்தநாளே வேலைக்கு போய் நடந்த விவரம் சொன்னபோது மேலாளர் மகிழ்ச்சியுடன் சொன்னார்." உதவி செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் மட்டுமே நம்மால் பிறருக்கு உதவமுடியும். அதுவும் ஒரு உயிரை காக்கும் அரியபணி இப்போது உனக்கு.. தைரியமாக போய்வாம்மா... நீ நலமுடன் வந்து திரும்ப எப்போது வேண்டுமானாலும் வேலையில் சேரலாம் "என்றார் கண்கள் பனிக்க 

கிட்னி கிடைக்காது பணம் இருந்து போராடி உயிர் விட்ட அவருடைய மனைவியை அவர் அந்நேரம் நினைத்ததை பாவம் ஃபாத்திமா அறிந்திருக்க வாய்ப்பில்லை..

டெஸ்டுகள் எல்லாம் முடிந்து ஃபாத்திமாவின் கிட்னி பொருந்தி இருப்பதை டாக்டர் சந்தோஷத்துடன் தெரிவித்து ஒரு மாதம் முன்பே நீ ஆஸ்பிடலில் அட்மிட் ஆகி உடம்புக்கு தேவையான சத்துள்ள மருந்துகளும் ஆகாரமும் உட்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார் டாக்டர்.

"டாக்டர் நான் நோன்பில் இருக்கேன். அல்லா கண்டிப்பாக நல்லதை செய்வார். நம்பிக்கையோடு சொல்கிறேன் ஆபரேஷனுக்குரிய ஏற்பாடுகள் செய்யுங்கள்" என்றாள் ஃபாத்திமா.

வியப்பான முகத்துடன் டாக்டர் பார்த்தார். தேவதை தான் இந்த பெண் தெய்வம் போல இவர்களுக்கு கிடைத்தது இவர்களின் அதிர்ஷ்டமே என நினைத்த்துக் கொண்டார்

ரமேஷ் ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டான். தினமும் ஃபாத்திமா அவனை அருகிலிருந்து நன்றாய் கவனித்துக்கொண்டாள். புன்னகையுடன் ரமேஷின் இடுங்கிய முகம் விரியும்போது தைரியமாக இரு என்று நம்பிக்கையோடு கைகோர்த்து சொன்னாள்.

நோன்பின் கடைசி நாள் ஆபரேஷனுக்கு தேதி குறிக்கப்பட்டது.

இங்கே ஷரீபுக்கும் பஷீருக்கும் இந்த விவரம் தெரிந்து பஞ்சாயத்து கூட்டினர்.. அதெப்படி கல்யாணம் ஆகாத பெண்ணை கிட்னி கொடுக்க சம்மதிக்கலாம் என்று குதித்தனர்.

பஷீரின் மனைவி இதில் எதிலும் சம்பந்தப்படாது தன் நெயில் பாலீஷ் கலையாமல் இருக்கிறதா லிப்ஸ்டிக் கலையாமல் இருக்கிறதா என்று அடிக்கடி கண்ணாடி பார்த்துக்கொண்டாள்.

இறுதியில் ஃபாத்திமாவுக்கு தெரியாமல் ரமேஷின் பெற்றோரிடம் ஃபாத்திமாவின் கிட்னிக்கு5 லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டது 

அவர்கள் ஃபாத்திமாவுக்கு இந்த விவரம் சொல்லக்கூடாது என்று அவர்களிடம் மிரட்டி பணத்தையும் பெற்றுக்கொண்டு  ஆளுக்கு பாதியாக.பிரித்துக் கொண்டனர்

இதை எல்லாம் மீனாள் பார்த்துக்கொண்டு அழுகையோடு மனதுக்குள் சபித்தாள். பாவிகளா நல்ல இதயம் கொண்ட இந்த பெண்ணுக்கு இப்படி ஒரு ஈவிரக்கமற்ற அண்ணன்களா... இறைவா அந்த பெண்ணையும் ரமேஷையும் காப்பாற்று உனக்கு பால்காவடி தூக்குகிறேன் என்று பிரார்த்தனை செய்தாள்.

ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து இருவரும் நலமுடன் வீடு திரும்பினர்.

 ஃபாத்திமாவின் உயர்ந்த மனதைக்கண்டு..ரமேஷின் பேற்றோர்.கண்ணீர் மல்க நன்றி கூறினர்

"ஷரீப் ஒரு மாப்பிள்ளை சம்மந்தம் வந்திருப்பதாக சொன்னதுமே .. கிட்னி தந்த விஷயம் மாப்பிள்ளை வீட்டுக்கு சொல்லிருங்க "என்றாள்  மீனா...

அதை சொல்லாமல் மறைத்து கல்யாணம் பேசினான் ஷரீப். வரதட்சனை அதிகம் கேட்டனர். தன்னிடம் இருக்கும் இரண்டரை லட்சம் ரூபாயை அவன் வெளியே எடுக்காமல் இதை விட குறைந்த சம்பளம் அதிக வயதுள்ள மாப்பிள்ளையை பார்த்தான் ஷரீப்.

இதையெல்லாம் அழுகையுடன் பார்த்துக்கொண்டு ஒன்றும் பேசாதிருந்தாள் ஃபாத்திமா....

அப்போது போன் ஒலித்தது.. எடுத்து பேசியது மீனாள்.... போனில் கேட்ட விவரம் அவள் முகத்தை பூரிக்க வைத்தது.

யார்என்று கேட்டாள் ஃபாத்திமா... "ரமேஷ் பெற்றோர் இன்னும் ரெண்டு மாதம் ரமேஷ் இங்கே ஓய்வு எடுத்துவிட்டு திரும்ப லண்டனுக்கே போகிறார்களாம்" என்றாள்...

இந்த செய்தி கேட்டு  ஃபாத்திமாவின் முகம்.வாடியது

 அதை ஓரக் கண்ணால் கவனித்தமீனா "நாளை ரமேஷ் பெற்றோர் வந்து உனக்கு ரம்ஜான் பரிசு தரப்போறாங்களாம்."
என்றாள் 

"அதென்ன அண்ணி எதிர்வீட்டில் இருந்துகொண்டு போனில் சொல்றாங்க? நேரில் ஏன் வரலை" 

"நாளை வருவாங்க தானே நீயே கேட்டுக்கோம்மா "என்று நமுட்டு சிரிப்புடன் போய்விட்டாள்.

திரும்ப தன் நண்பனை இழக்க போகிறோமே என்ற சோகம்  அவள் முகத்தில்..படர்ந்தது

மறுநாள் ரமேஷ் பெற்றோர் தட்டு நிறைய பழங்கள் வைத்து கொண்டு வந்து வைத்தனர்.

"எதுக்கு இதெல்லாம் "எழமுடியாது சிரமத்துடன் படுத்துக்கொண்டாள் ஃபாத்திமா...

மீனாட்சி தான்  முதலில் ஆரம்பித்தாள்...

"ஃபாத்திமாவை எங்கவீட்டு பொண்ணா சம்மந்தம் பேச வந்திருக்கோம் "...

அதிர்ச்சியுடன் எல்லோருமே பார்த்தனர்...

"என்ன அப்படி பார்க்கிறீங்க?? பிராமணன் எப்படி முஸ்லிம் பெண்ணை தன் மகனுக்கு பார்க்கிறான் என்றா? இந்தாம்மா ஃபாத்திமா.. பரிதாபப்ப்ட்டோ இல்லை நீ என் மகனை உயிரோடு எங்களுக்கு திருப்பி கொடுத்ததுக்காக நாங்க எடுத்த அவசர முடிவுன்னு நினைக்காதே..உனக்கு பார்த்த மாப்பிள்ளை வரன் இருவரும் அதனால் கேட்கப்படும் வரதட்சனையும் பற்றி வயதான மாப்பிள்ளை குறித்தும் மீனாள் வந்து எங்களிடம் சொன்னாள்."
எங்க மாணிக்கத்தை நாங்க இழந்துட போறோமோன்னு ஒரு சுயநலத்துல தான் தாயே உன்னை வந்து பெண் கேட்டோம்.
புரியலையா? எங்களுக்கு மகளாக இருக்கும் பெண் தான் எங்க வீட்டுக்கு மருமகளா வரனும்.. அது நீயா தான் இருக்கனும்.. இது ஆற அமர யோசித்து எடுத்த முடிவு தான்.. உனக்கு இஷ்டம் இருந்தால் மட்டுமே நாங்க மேற்கொண்டு இந்த காரியத்தை தொடர்வோம் "என்று சொல்லி நிறுத்தினார்.

ஃபாத்திமா குழப்பமான முகத்துடன் மீனாள் முகம் பார்த்தாள்.

மீனாள் சந்தோஷத்துடன் அம்மா, “ எங்க ஃபாத்திமாவுக்கு இதை விட நல்ல சம்ப்ந்தம் கொண்டு வந்திருக்கமுடியாது “எங்க ஃபாத்திமா குழந்தை. அவளுக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியும். எங்க வீட்டுக்காரரே என்னை காதலித்து மணந்தவர் தான்." என்றாள்

"ஃபாத்திமா நட்புக்குள் காதல் வரக்கூடாது.. ஆனால் நட்பு நல்லதொரு வாழ்க்கை தரலாமே என்ன சொல்றே?"

நாணத்துடன் தலைகுனிந்து தன் சம்மதம் தெரிவித்தாள் ஃபாத்திமா...

தூரத்தில் தொழுகை தொடங்க மணி அடிக்கும் சத்தம் நல்ல நட்பு வாழ்க்கையாகும் நல்லதொரு நிகழ்வுக்கு சாட்சியாக ஒலித்தது....

61 comments:

  1. கொஞ்சம் பெரிய பதிவா இருக்கு, அதனால் படிச்சிட்டு வந்து கருத்து சொல்றேன்.

    ReplyDelete
  2. கதை ரொம்ப நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. பெரிய ஆனால் அருமையான கதை

    ReplyDelete
  5. அருமையான கதை. ஊதாரி அண்ணன், பாசமான அண்ணி, பணத்தாசைப்பிடித்த இன்னொரு அண்ணன் , பணக்கார இன்னொரு அண்ணி ஜாதி மதம் பார்த்து நல்ல நட்புகளை புரிந்துக்கொள்ளாத எதிர்வீட்டுக்காரர்கள் என ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் இணைத்து கொடுத்திருக்கும் விதம் ரொம்ப அருமை. தமிழ் சினிமா போல அண்ணங்கள் சண்டை போட்டு இவங்கள பிரிச்சிடுவாங்களோ என்று பயந்தேன். ஆனால் அதுக்கு முன்னடியே கதையை முடிச்சிட்டீங்க. நன்றி

    ReplyDelete
  6. பாத்திமா போன்ற நல்ல மனம் படைத்த அனைத்து சகோதரிகளுக்கும்...நல் வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.... நட்புக்கு மதம் இல்லை என பாத்திமா ரமேஷின் தோலை ஆறுதலாக பிடிக்கும் போது யாமிருக்க பயமேன் என்ற வசனமே சாட்சி.... மிக அற்புதமான மனதை வருடிய கதைக்காக தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நான் என் வாழ்வில் கண்ட சில கதாபாத்திரங்களும் கண்முன்னே வந்து சென்றன... வளமான கவிதை வாழ்த்துக்கள் அக்கா..!

    ReplyDelete
  8. அருமையான ரம்ஜான் பரிசு மஞ்சு,பாத்திமாவுக்கு மட்டும் இல்லை எங்களுக்கும்தான். நன்றி..

    ReplyDelete
  9. கதையின் கருவும்-சொல்லும்
    கதையின் உருவும்
    நகமும் சதையுமாய்-விளங்கி
    நலமுற உதவும்
    படைத்தீர் கதையே -பதிவைப்
    படிப்பவர் இதையே
    தடையின்றி செய்ய-வழி
    தந்திடும் உய்ய

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. தங்கள் கதைகள் அனைத்தையும் ஏறக்குறைய
    படித்துவிட்டேன்.அனைத்திலும் சிறந்தது இது என
    நிச்சயம் என்னால் சொல்லமுடியும்.
    கதைக் கரு, கதாபாத்திரங்கள்.,எளிமையான சொற்பிரயோகம்
    ஆற்றோட்டமன நடை.அனைத்திலும் இந்தப் படைப்பு
    பிற படைப்புகளைவிட வித்தியாசமானதாகவே
    உயர்ந்ததாகவே உள்ளது
    காரணம் கூட (என் அனுமானம் சரியா எனத் தெரியவில்லை)
    இந்தக் கதையைத்தான் முழுவதுமாக யோசித்து முடித்த பின்னேதான்
    எவ்வித குழப்பமுமின்றி எழுதத் துவங்கி இருப்பீர்கள்
    என நினைக்கிறேன்.இல்லையெனில் இவ்வளவு சரளமான
    நடை அமைவது கஷ்டம்.(ஓடினாள் பஸ்ஸைப் பிடிக்க
    என்பதை தவிர).தரமான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அன்புநிறை சகோதரி,

    இயல்பான எழுத்து நடை, உங்கள் கதையை தூக்கி நிறுத்துகிறது.
    பாத்திமா வின் பாத்திரப்படைப்பு நன்று.

    நட்பில் காதல் நுழைந்துவிடக்கூடாது என்ற
    கரு அற்புதம்.

    நல்லா இருக்குதுபா

    ReplyDelete
  12. பொறுமையாக படித்து கருத்து இட்டமைக்கு என் அன்பு நன்றிகள் காந்தி....

    ReplyDelete
  13. அன்பு நன்றிகள் சே குமார் கருத்து பதிந்தமைக்கு....

    ReplyDelete
  14. அன்பு நன்றிகள் ராஜப்பாட்டை ராஜா கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  15. அன்பு நன்றிகள் ராஜேஷ் கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  16. அன்பு நன்றிகள் நிரோஷ் கருத்து பதிந்தமைக்கு....

    ReplyDelete
  17. அன்பு நன்றிகள் ராம்வி கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  18. எப்போதும்போல் அழகிய கவிதை நடையில் கருத்து பதிந்தமைக்கு அன்பு நன்றிகள் இராமானுசம் ஐயா...

    ReplyDelete
  19. வணக்கமம்மா அருமையான மதங்களை தாண்டிய நற்பின் கதையை படைத்துள்ளீர்கள்.. இயல்பான எழுத்து நடை ரமனி ஐயா சொல்வதுபோல் மனதுக்குள் முழுக்கதையையும் தயார் செய்துவிட்டு எழுதத்தொடங்கியுள்ளீர்கள்.. தெளிந்த நீரோடையை ஒத்த கதை நகர்வு வாசகர்கள் மனதை குழப்பமின்றி ஆக்கிரமிக்கும் என நம்புகின்றேன்.. வாழ்த்துக்கள் சகோதரி..

    சகோதரிக்கு ஓர் அன்பான வேண்டுகோள் நீங்கள் பதிவிடும்போது அதை எங்களுக்கு ஒரு ஈ மெயில் மூலம் தெரியப்படுத்தலாமே..!!? ஏனெனில் என்னைப்பொன்றவர்கள் ஒவ்வொரு நாளும் டாஸ் போட்டை பார்பதில்லை.. இது ஓர் வேண்டுகோள் மட்டுமே...

    வாழ்த்துக்களுடன் காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  20. நல்ல மனசுக்காரர்களை ஆண்டவன் கை விடுவதில்லை!
    ஒரு கிட்னியுடன் ஆரோக்கியமாக என்னால் யதார்த்த வாழ்க்கை வாழமுடியும்போது ஒரு கிட்னி நான் என் நண்பனுக்காக தரமுடியும். அல்லா கண்டிப்பாக என்னுடையதை என் நண்பனுக்கு பொருந்துமாறு செய்வார். நட்பு எதையும் தாங்கும். நட்பு எதையும் செய்யும். என்பதை நான் சொல்லித்தானா தெரியனும் டாக்டர் என்றாள் ஃபாத்திமா..

    நட்பு வெல்க.. வாழ்க.

    ReplyDelete
  21. மஞ்சு,
    தேரோட்டமான கதை. கரு, உரு எல்லாம் பரு. வியப்பாக...விரிந்த கண்களுடன்... இன்னும்...

    ReplyDelete
  22. அருமையான கதை.
    மனசு நெகிழ்கிறது.
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  23. ரமேஷ் அழாதே டா... உயிர் விட வந்த உன்னை உயிரோடு திரும்ப நான் பார்ப்பேன்.. நம்பு என்று உறுதியுடன் சொல்லி அவன் கண்களை துடைத்தாள்./

    பூவாய் மலர்ந்து மணம் வீசும் அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  24. சகோதரி,வணக்கம்.புலவர் இராமானுசம் அவர்களின் கவிதையைப் படித்தேன். அதில் தங்களின் பின்னூட்டம் படித்தேன். அவரது கவிதைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டியது போல் உங்கள் பின்னூட்டம் அருமையாக இருந்தது.அதைத் தொடர்ந்து உங்கள் வலைப்பக்கம் வந்தேன்.அருமையான கதை.ஆனால் இதை நான் முன்பே வாசித்திருப்பதாக நினைவு.தாங்கள் இதை வேறு எந்த பத்திரிகைகளிலாவது எழுதி வெள்யிட்டிருக்கின்றீர்களா?

    ReplyDelete
  25. அன்பு நன்றிகள் ரமணி சார் கருத்து பதிந்தமைக்கு...

    இந்த கதையின் சோக கதை சொன்னா நம்பமாட்டீங்க.. ரம்ஜான் பரிசு கதை எப்ப எப்படி எழுதியதுன்னா...

    நான் ஆபிசுல ரொம்ப பிசியா இருந்தப்ப அலாவுதீன் சார் தமிழ் அமுதம் புக்ல வேலை செய்றவர்.. என்னை கால் செய்து ம்மா இப்ப அவசரமா எனக்கு ஒரு கதை வேணும் புக்ல போட ரம்ஜான் நோன்பு சம்மந்தப்பட்டது.. கவிதையோ கதையோ எதுன்னாலும் சரி எழுதி அரை மணில எனக்கு மெயில் அனுப்புங்கன்னு சொன்னார்...

    நானோ ஆபிசுல பிசியா இருக்கேன்.. எப்படி என்ன செய்வதுன்னு தெரியலை... சரி முதல்ல யோசிச்சுப்போம்னு.. நட்பு, நட்புக்குள் காதல் வரக்கூடாது., கலப்பு திருமணம், உதவி, நோன்பு, ரம்ஜான்... இதை மட்டும் மனசுல வெச்சுக்கிட்டு வேகமா வர்ட்ல டைப் செய்ய ஆரம்பிச்சேன். கதை எப்ப்படி ஆரம்பிச்சு எப்படி போச்சுன்னு தெரியாது... எப்படியோ கதை முடிச்சு கட கடன்னு மெயில்ல்ல அனுப்பிட்டேன். ஆனால் என் கதை ரிஜக்ட் ஆகிட்டுது...

    ரிஜக்ட் ஆன கதையை எப்படி போட அப்டின்னு தயங்கிக்கிட்டே இருந்தேன். இந்த கதை போன வருடம் ரம்ஜானுக்கு எழுதி அனுப்பியது... அதை இந்த ரம்ஜானுக்கு என் தளத்துல போடலாமா.. போட்ட்டால் நல்ல கமெண்ட் கிடைக்குமா இல்ல திட்டுவாங்களா இப்படி பயந்து பயந்து அப்புறம் சரி போ போட்ரலாம்னு போட்டுட்டேன் நேத்து...

    கதை ஒரு வரி கூட யோசிச்சு எழுதலை ரமணி சார். அது பாட்டுக்கு எழுத எழுத போய்க்கிட்டே இருந்திச்சு.. எப்படியோ முடிச்சிட்டேன்... இதான் இந்த ரம்ஜான் பரிசு கதை பிறந்த ரகசியம் :)

    எல்லா கதையுமே இந்த மாதிரி தான் ரமணி சார்... நான் பாட்டுக்கு டைப் பண்ணிக்கிட்டே இருப்பேன், மனசுல என்ன தோணுதோ அப்டியே டைப் பண்னிருவேன்...

    பஸ்ஸை பிடிக்க ஓடினாள் அதுல என்ன தவறுன்னு சொன்னீங்கன்னா நான் திருத்திப்பேன் சார்..

    ReplyDelete
  26. அன்பு நன்றிகள் மகேந்திரன் கருத்து பதிந்தமைக்கு...

    கரெக்டா கண்டுப்பிடிச்சிட்டீங்க....

    ReplyDelete
  27. அன்பின் காட்டான் சகோதரரே,

    எங்க உங்களை ரொம்ப நாளா காணலையேன்னு நினைச்சேன்.. உங்க மெயில் ஐடி எனக்கு தெரியாதேப்பா..

    வேண்டுகோள் எதுக்குப்பா.. என்னால் முடிந்ததை கண்டிப்பா செய்வேன்பா..

    கண்டிப்பா இனி படைப்புகள் இடும்போது உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்... மெயில் ஐடி தாங்க எனக்கு....

    அன்பு நன்றிகள் காட்டான் சகோதரரே கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  28. அன்பு நன்றிகள் ரிஷபன் கருத்து பதிந்தமைக்கு...

    உண்மையேப்பா.. நட்பை நான் ரொம்ப உயர்வாக கருதுகிறேன்...

    நட்பில் ஏற்படும் அற்புதங்கள் சொல்ல வார்த்தைகளே இல்லை...

    ReplyDelete
  29. அன்பு வரவேற்புகள் ஆதிரா.. எப்படி இருக்கீங்க?

    அன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு... என்ன இருந்தாலும் உங்க அளவுக்கோ அல்லது கலை அளவுக்கோ என்னால் எதுவுமே எழுத இயலாது என்பதையும் நேர்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்பா..

    ReplyDelete
  30. வாங்க ரத்னவேல் ஐயா...

    அன்பு நன்றிகள் ஐயா கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  31. அன்பு நன்றிகள் ராஜேஸ்வரி கருத்து பதிந்தமைக்கு... இந்தாங்க ஒரு ஜோடி வைரக்கம்மல் உங்களுக்கு தான் என் பரிசாக.... :)

    ReplyDelete
  32. அன்பு வரவேற்புகள் எழிலன் ஐயா...

    எப்படி இருக்கீங்க?

    இந்த கதை போன வருடம் தமிழ் அமுதம் புக்குக்காக அலாவுதீன் சார் கேட்டு நான் எழுதி அனுப்பியது துரிதமாக. ஆனால் அவங்க என் கதையை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க ஐயா... அதன்பின் இந்த கதையை மூணு தளங்களில் போட்டேன். www.kalaitamilmutram.com

    ஹை என் கதை புக்ல வந்திச்சா ஐயா? எந்த புக்ல ஐயா? வந்தால் சந்தோஷம் எனக்கு...

    அன்பு நன்றிகள் ஐயா கருத்து பதிந்தமைக்கும்.. புலவர் இராமானுசம் ஐயாவின் கருத்துக்கு நான் அளித்த பின்னூட்டம் நன்றாக இருந்தது என்று பகிர்ந்தமைக்கும்...

    ReplyDelete
  33. அன்பின் காட்டான் சகோதரரே..

    நான் இந்த கதையின் கரு கூட யோசிக்கலப்பா... அவசரமா டைப் செய்ய தொடங்கி எப்படியோ முடிச்சிட்டேன்... நல்லா வந்தது என் அதிர்ஷ்டம்...

    ReplyDelete
  34. ...அட..அற்புதம் எப்படி இத்தனை நாள் இந்த பதிவைப் பார்க்காமல் விட்டேன்...
    நான் எழுதும் போது ஒரு பொறுப்பு கூடி விடுகிறது...ப்ளாக்குகளில் எழுதுபவர்கள் ETHICS ஸோடு எழுதுகிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணமாய் அமையட்டும்...


    நட்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  35. அன்பு வரவேற்புகள் ஆர் ஆர் ஆர்....

    அன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு..


    உங்க தளம் வந்து பார்த்தேன்.. ரொம்ப அருமைப்பா...

    ReplyDelete
  36. ஓ!...மஞ்சும்மா முதன் முதலா உங்க கதை வாசித்தேன் மிக பிரமாதமாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துகள். கதை போகும் போக்கில் முடிவு ஊகிப்பேன் இது எதுவுமே நான் ஊகிக்க வில்லை. அருமை. இதை நீங்கள் ஏதும் பத்திரிகைக்கோ அன்றி சஞ்சிகைகளுக்கோ நிச்சயமாக அனுப்பலாம். இறை அருள் கிட்டட்டும்.

    ReplyDelete
  37. உணர்ச்சிப்பெருக்குடன் அமைந்த கதை வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  38. இக்கதையில் வருபவர்கள் பலரை நாம் நேரில் காண்கின்றோம். மதம் வேண்டாம்; மனிதம் போதும்! எனும் சூழல்... பாதிக்கப்பட்ட, உயிரின் விளிம்பிற்க்கு சென்று மறுவாழ்வு பெற்ற யதார்த்த நாயகர்களுக்கு எளிதில் கிட்டிவிடும். முடிவு “கவி நயம்”!

    ReplyDelete
  39. கொஞ்சம் பெரிய கதை என்றாலும் அருமையா இருக்கு...!!!

    ReplyDelete
  40. நல்லதொரு கருவில் வந்த முற்போக்குக் கதை. மதம் என்னும் மதம் பிடித்த மனிதன், மனிதம் பார்க்கும் நிலை ஏற்பட வேண்டும் என்று எடுத்துரைக்கும் சிந்தனை வடிவம். மஞ்சுபாஷினி நீங்கள் கதை சொல்லும் பாங்கு மிகவும் அருமையாக இருக்கின்றது.வாசித்துச் செல்லுகின்ற போது அடுத்து என்னவரும் என்ற ஏக்கம் மனதிலே தென்படுகின்றது.

    ReplyDelete
  41. நல்லதொரு கருவில் வந்த முற்போக்குக் கதை. மதம் என்னும் மதம் பிடித்த மனிதன், மனிதம் பார்க்கும் நிலை ஏற்பட வேண்டும் என்று எடுத்துரைக்கும் சிந்தனை வடிவம். மஞ்சுபாஷினி நீங்கள் கதை சொல்லும் பாங்கு மிகவும் அருமையாக இருக்கின்றது.வாசித்துச் செல்லுகின்ற போது அடுத்து என்னவரும் என்ற ஏக்கம் மனதிலே தென்படுகின்றது.

    ReplyDelete
  42. நல்ல மனங்களுக்கு நல்லதே நடக்கும் என்ற கருத்து அழுத்தமாய் விதைக்கப் பட்டிருக்கிறது. மதங்களில் அல்ல, மனங்களில்தான் வாழ்க்கை என்பதும் நிறுவப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  43. அன்பு நன்றிகள் வேதாம்மா கருத்து பதிந்தமைக்கு....

    அட அனுப்பினேன் வேதாம்மா வேண்டாம்னு ரிஜக்ட் ஆகிவிட்டது....:)

    ReplyDelete
  44. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

    ReplyDelete
  45. இது சிறுகதை அல்லது நெடுங்கதை என எப்படி எடுத்து கொண்டாலும் கதையின் கருவும் சொல்லுகிற பங்கும் நல்ல சிறுகதைக்குரிய இலக்கணத்தை பெறுகிறது முரண்பட்ட குடும்பம் அனைவரையும் அரவணைத்து செல்லும் பக்குவம் என எல்லா இடங்களிலும் நிமிர்ந்து நிற்கிறது உங்களின் கதை அமைப்பு அதாவது கலை கலைக்காகவே என்கிற வறட்டு தத்துவம் போலில்லாமல் கதையும் இலக்கியங்களும் வாழும் மக்களுக்காகவே என்கிற உயரிய பின்புலத்தை கொண்டு சிறக்கிறது பாராட்டுகள்.

    ReplyDelete
  46. அருமையான கதை தங்கு தடையின்றி நீரோட்டமாய் அழகாய் சென்றது . உங்களை அறிமுகம் செய்த ராஜேஷுக்கு நன்றி

    ReplyDelete
  47. அன்பு வரவேற்புகள் தக்குடு... உங்கள் தளம் வந்து பார்த்தேன், மிக அருமைப்பா..

    அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  48. அன்பு வரவேற்புகள் நெல்லி மூர்த்தி...

    உங்கள் தளம் வந்து பார்த்தேன்பா... மிக அருமையாக இருந்தது....

    அன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு....

    ReplyDelete
  49. அன்பின் சந்திரகௌரி.....

    அன்பு நன்றிகள்பா கருத்து பதிந்தமைக்கு....

    ReplyDelete
  50. அன்பு நன்றிகள் ஸ்ரீராம் கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  51. வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு அன்பு நன்றிகளுடன் கூடிய வாழ்த்துகள் ராஜேஷ்...

    ReplyDelete
  52. அன்பு நன்றிகள் மாலதி கருத்தை உள்வாங்கி பதிந்தமைக்கு....

    ReplyDelete
  53. நட்புக்கும் உறவுக்கும் மதம் அல்ல மனமே முக்கியம் என்று சொல்லும் உங்கள் கதை அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  54. அன்பு நன்றிகள் கீதா கருத்து பதிந்தமைக்கு....

    ReplyDelete
  55. .நெஞ்சை நெகிழவைத்த அருமையான கதை சகோதரி ஃபாத்திமாவின்
    பண்பையும் ஒழுக்கத்தையும் பாராட்டித் தெய்வம் கொடுத்த அழகிய
    வாழ்க்கைத்துணைதான் அந்த ரமேஸ் என்பதனை வாசிக்கும் எமக்கும்
    ஒரு கதைபோன்று இல்லாமல் ஏதோ நிஜமான சம்பவத்தை நேரில்க் கண்டு
    உணர்வதுபோல் மிக அழகாக உணர்வுபூர்வமாகச் சித்தரித்துள்ளீர்கள் .கதையின் ஆரம்பமும் முடிவும் அருமை வாழ்த்துக்கள் தொடர்ந்தும்
    எழுதுங்கள் சகோதரி .நன்றி இப் பகிர்வுக்கு .............

    ReplyDelete
  56. அன்பு நன்றிகள் அம்பாளடியாள் கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  57. முதன்முறையாக உங்கள் எழுத்தைப் படித்தேன். கதை நன்று. படித்ததும் நான் நினைத்தது - முஸ்லிம் வாசகர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதுதான். நீங்களே எழுதிவிட்டீர்கள், இந்த கதையை கேட்டு வாங்கிய அல்லாவுதீன் இதை நிராகரித்துவிட்டார் என்று. - ஜெ.

    ReplyDelete
  58. ரொம்ப அருமையா கதையை சொல்லி இருக்கீங்க. நல்லா இருக்கு. நானும் உங்க ஃபாலோவரா இணைச்சுகிட்டென்.

    ReplyDelete
  59. எப்படி நுழையுமென்று சொல்ல முடியாத காற்று காதல். ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே என்று முடிக்காதது நன்று.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...