"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, September 10, 2007

பிரிவில் ஏது வ‌கை?

பிரிவு என்னால் தாங்க‌ முடிய‌வில்லையே
பிரிவே இது தான் உன் வ‌லியா?
பிரிவில் ஏது வ‌கை?
காத‌லி காத‌ல‌னை பிரிந்தாலும் வ‌லி
ந‌ண்ப‌னை பிரிந்தாலும் வ‌லி
க‌ணவ‌ன் ம‌னைவியை பிரிந்தாலும் வ‌லி
தாய் த‌ன் ம‌க‌னை பிரிந்தாலும் வ‌லி
வ‌லியும் வேத‌னையும் ஒன்றுதான்
நீ த‌ரும் வ‌லி நீயே வ‌ந்து போக்க‌டா....
பிரிவு என்னால் தாங்க‌ முடிய‌வில்லையேடா...

4 comments:

  1. அன்பின் மஞ்சுபாஷினி - பிரிவின் துயரம் சொல்லில் வடிக்க இயலாது. அது யார் யாரைப் பிரிந்தாலும் வரும் துய்ரம் தான். பிரிந்தவர் கூடினால் தான் துயரமும் வலியும் தீரும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. பிரியாமல் இருக்கும் வரம் வேண்டும்

    ReplyDelete
  3. ஐந்து வருடங்களுக்கு முன்பே பிரிதலைப்பற்றிய ஒரு முன்னோக்குப் பார்வை உங்களிடம் இருந்துள்ளதைக் காணும்போது கவிஞர்களின் சிறப்பே இது தானோ என வியக்க வைக்கிறது.

    கவிஞர்கள் தீர்க்கதரிசிகள் தான்.. வாழ்த்துகள்..!

    ReplyDelete
  4. வரம் கேட்டால் சாபம் தரும் நவீனக்கடவுள்கள் இருக்கும் புதிய உலகம்.. என்ன செய்வது..? யாரை நோவது..? அருமையான வரிகள். பாராட்டுகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...