"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, May 5, 2010

ஆசை ஆசை....

ஆசை ஆசை....
உன் வசமாகிவிட ஆசை
உன் மனதில் என்றும்
இருந்து விட ஆசை

அன்பால் உன்னை
வளைத்துவிட ஆசை
உன் மூச்சை
கொஞ்சமே சுவாசிக்க ஆசை

உன் இதழில்
கவிதை வரைய ஆசை
உன் பாதம்
என் இல்லம் புக ஆசை

என் மனதில் நீ
என்றும் உறைந்திட ஆசை
வற்றாத அன்பை
நாம் பகிர்ந்துவிட ஆசை

என் காதலை
உன் காதில்
கிசுகிசுக்க ஆசை

கேட்டதும் நீ
நாணி தலைகுனிவதை
கண்டிட ஆசை

காதலுடன் நீயும்
என்னை ஏற்றுக்கொள்ள
ஆசை

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...