"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, May 5, 2010

ஒரு காதலின் பயணம்....!

நட்பாய் தொடங்கி காதலாய் கசிந்துருகி
ஏக்கங்களே கனவுகளாகி
கண்ணீரோடு விடைபெற்றது
கன்னிக்காதல்...

பட்டம் பெற்றுவிட
தொட்டுவிடும் தூரம்தான்
என்றெண்ணி தொடர்ந்த
கல்லூரிவாழ்க்கையில்
இடம்பெறவில்லை
பருவக்காதல்....

உலகமறியாப்பருவத்தில்
அனுபவம் கற்கா வயதில்
கணவனோடு இணைத்தது
கல்யாணக்காதல்...

பிள்ளைகள் வளர்ந்த வேகத்தில்
திறமைகளை மறந்த நேரத்தில்
சுயமுகவரி தொலைத்து
பொறுமையாய் காத்திருந்தது
அன்புக்காதல்...

அன்புகூடிய அந்த கணங்களில்
சுயநலம் கொண்ட பிள்ளைகள்
வேண்டாமென ஒதுக்கிய பெற்றோரை
வாரி அணைத்தது
முதுமைக்காதல்...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...