"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, May 5, 2010

கர்ப்பக்குழந்தையின் கதறல்..

விந்தை உலகம்
மொந்தைக் கள்ளாய்
பழமையைக் கொண்டாடும்
பழமைவாதிகளும்
புதியதை படைக்கும்
புதுமை விரும்பிகளும்

வரதட்சணையால்
வரன் தொலைத்த
பேரிளம்பெண்களும்
காதலைப்பேசி
காசைக் கரியாக்கும்
இன்றைய விடலைகளும்

கழுத்தை இறுக்கும்
லஞ்சமும் ஊழலும்
பொதுவாய் வந்து
பாவமாய் ஓட்டுப்போட்டு
விலகும் பொதுஜனமும்
மனைவியின் காசில்
வெட்டிப்பொழுதை
போக்கும் கனவான்களும்

வட்டித்தின்று
வயிற்றை வளர்க்கும்
ஈட்டிக்காரர்களும்

அழும் குழந்தைகளுக்கு
கள்ளிப்பாலால் அமுதூட்டி
வறுமைக்கு பெண்குழந்தையை
பரிதாபமாய் பலியாக்கி

கல்லுக்கு அபிஷேகம் செய்து
செய்யும் திருட்டுக்கெல்லாம்
இறைவனை உடந்தையாக்கும்
இன்றைய அரசியல்வாதிகளும்

ஐயோ அம்மா
வேண்டாம் வேண்டாம்
இந்த உலகம் காணும்
கொடிய பிறப்பு
எனக்கு வேண்டாம்

மூச்சை இறுக்கி
என்னை உன்னுள் வைத்து
அமிழ்த்தி சுகமாய்
இரு(ற)க்க விடு அம்மா..

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...