"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, May 5, 2010

சுவாசமாய் நிலைப்பேன் என்றும் உன்னோடு....

அன்பு பூசிய உறவு
நீடித்து என்றும் நிலைப்பதுண்டு
பண்பு இல்லா உறவு
வம்பு வந்து விலகுவதுமுண்டு

விருப்பப்பாடல்கள் கேட்டு
விரும்பிய கருத்துகள் பகிர்ந்து
விண்ணில் நீயும் பறந்து
விலகியது நாணமும் சிறிது

கவிதையில் காதல் கதைத்து
பொய்ப்பேசும் கண்களை தவிர்த்து
வாசமுடன் உன்னை அணைத்து
உன்னை என்றும் என்மனதில் வைத்து

உயிராய் தினமும்  பூஜித்து
ஜனனம் மீண்டும் எடுக்காது
உன்னிடமே சங்கமமாகி இறுதியில்
சுவாசமாய் நிலைப்பேன் என்றும் உன்னோடு.....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...