"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, May 5, 2010

நூலிழை சுவாசத்தில்?

இத்தனை சக்தியா
நீ காட்டிய
நேசத்துக்கு?

என் சுவாசத்தை
இத்தனை நாள்
கட்டுப்படுத்தியது
நீதானா?

பிரிவு எனும் சொல்
சுவாசத்தை
தடை செய்யுமா?

அடங்கிக்கொண்டிருக்கும்
நூலிழை சுவாசத்தில்
துடிக்கவைக்கமுடியுமா?

உன்னை நினைக்கவைக்கமுடியுமா?
நெஞ்சை மிக பலமாய்
அடைக்கச்செய்யுமா?

அத்தனை சக்தியா
உன் நேசத்துக்கு?

எங்கோ இருந்துக்கொண்டு
உன் நேசத்தினால் என்னை
வாழவைக்கமுடியுமா?

கட்டுப்படுத்திய சுவாசம்
தடையில்லாமல்
உன்னுடனே கலக்க
அத்தனை அற்புதமா
நேசம்?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...