"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

ரசிக்கிறேன்....

உன்னை பிரிந்திருக்கும் நேரமெல்லாம்
சபித்து தீர்க்கிறேன் இந்த இறைவனை
உன்னை காணும் கணம் எல்லாம்
மனம் சந்தோஷ கூச்சலிட ஆர்பரிக்கிறது
 

உன் குரல் என் காதில் ஒலிக்கும் நேரமெல்லாம்
மனசு போடும் குதியாட்டத்தை நிறுத்தமுடிவதில்லை
இதோ உன் அடுத்து நான் நிற்கும்போது
என் நிழல் உணர்ந்தும் ஓரக்கண் பார்வை
எனை பார்க்கும்போது பறக்கிறேன் வானத்தில்
 

நீ என்னுடன் என்னவோ பேசுகிறாய் தான்
ஆனால் என் காதில் ஏன் விழவே இல்லை
உன் முகத்தையே பார்த்து என்னையே மறக்கிறேன்
 

புதுப்புடவை உடுத்தி உன் அடுத்து நடக்கும்போது
உன் கால்களை கவனிக்கிறேன் என்ன ஒரு ப்ரகாசம்
உன் காலடி சுவடுகள் கூட என்னை கண்டு சிரிக்கிறதே
 

என்ன தான் செய்வேன் இப்படி உன்னை ரசித்து
என்னை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறேனே
என்னவோ கூக்குரல் எங்கே என் மனதிலிருந்தா?
 

உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் வரை தான் இந்த ரசிப்பு
குழந்தை பிறந்ததும் உன் ரசிப்புத்தன்மை 
இடம் மாறி விடும் பைத்தியக்காரி கொக்கரிக்கிறது என் மனம்
உண்மையா மகனே?? உப்பி இருக்கும் 
என் வயிற்றை தடவிக்கொண்டு நான் வெட்கச்சிரிப்பில்.....

2 comments:

  1. சத்திய வார்த்தைகளே சிவகுமாரன்... அன்பு நன்றிகள் தங்கள் கருத்திற்கு..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...