"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

சுகம்.....

அதிகாலை பனியில் வெந்நீரில் குளிப்பது சுகம்
மடி ஆடை உடுத்தி பூஜை அறையில் அமர்வது சுகம்
அமர்ந்து ஓம் கணேசாய நமஹ என தொடங்கி
அபிஷேகம் ஆராதனை செய்வது சுகம்
 

பர பரவென வேலைகளுக்கிடையே மனம் அமைதியுடன்
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 
என்ற பாடல் முணுமுணுப்பது சுகம்......
கூட்ட நெரிசலில் உட்கார பஸ்ஸில் 
இடம் கிடைப்பது ஒரு சுகம்......
 

சரியான நிறுத்தத்தில் இன்று ஒரு நாள்
மட்டும் நடத்துனர் நிறுத்தி 
பக்கத்திலேயெ அலுவலகம் எட்டியது சுகம்...
இன்று மட்டும் திட்டு வாங்காமல்
வேலை வேகமாக முடித்துவிட்டது சுகம்
 

மாலை பிள்ளைகளை காண காத்திருப்பது சுகம்
வீடு சேருமுன்னே கணவன் இன்று மட்டும்
எனக்காக காபி போட்டு நீட்டுவது சுகம்
பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவது சுகம்
வேலைகளை வேகம் முடித்து சீக்கிரம் படுப்பது சுகம்...
 

அன்றாட வாழ்க்கை எந்திரமயமாகும்போது
இது போல சின்ன சின்ன சுகங்களை
ஏற்படுத்திக் கொள்வது சுகம்.....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...