"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, August 10, 2011

இன்னுமொரு காதல்....

இன்னுமொரு காதல்....

கொன்று குவித்த மனதில்
வற்றாத அன்பாய்
இன்னுமொரு காதல்

மனதை கீறிய செயல்கள்
சொல்லி துடிப்பது
இன்னுமொரு காதல்

வலிக்கும்போதெல்லாம்
நெஞ்சை நீவி காக்கும்
இன்னுமொரு காதல்

உயிர் நீ எனக்கு
சொல்லி குதறியது
இன்னுமொரு காதல்....

9 comments:

  1. மனதை கீறிய செயல்கள்
    சொல்லி துடிப்பது
    இன்னுமொரு காதல்/

    என்ன அக்கா அடுக்கடுக்காக போடுவதைவிட ஒவ்வொன்றாகப்போட்டால் எல்லோரும் வாசிப்பார்களே..
    பெரும்பாலும் வருபவர்கள் கடைசியாய் போட்ட பதிவைத்தான் பார்த்துவிட்டு போவார்கள்...

    நல்ல கவிதை,....
    வாழ்த்துக்கள்..
    இன்னுமொரு காதலால்..

    ReplyDelete
  2. ஆஹா மறுபடியும்... ஆனால் வலியுடன் கூடிய காதல் கவிதை

    ReplyDelete
  3. இன்னுமொரு காதல் ஆறுதல்

    ReplyDelete
  4. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. விடிவெள்ளி கூறும் கருத்தைதான் நானும் சொல்ல நினைத்தேன்.. குறைந்த பட்சம் ஒரு வார இடைவெளியில் கவிதை கதை பதிந்தால் அனைவருக்கும் நிதானமாக வாசித்து கருத்திட வசதியாய் இருக்கும்.. காதலின் வலியை அழகாகச்சொல்லிவைத்த இன்னுமொரு அற்புதமான கவிதை..! பாராட்டுகள் மஞ்சு..!

    ReplyDelete
  6. அன்பு நன்றிகள் விடிவெள்ளி...

    இனிமே கண்டிப்பா வாரத்திற்கு ஒரு படைப்பு தருகிறேன்பா....

    ReplyDelete
  7. அன்பு நன்றிகள் மாய உலகம் ராஜேஸ் கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete
  8. அன்பு நன்றிகள் ரத்னவேலு ஐயா...

    ReplyDelete
  9. ஓக்கே கலை இனி அப்படியே செய்கிறேன்.... மிக்க மகிழ்ச்சி கலை கருத்து பதிந்தமைக்கு...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...