"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

சென்னை மாநகரம்.....

ஏதோ நடக்கிறது
ரகசியம் உடைகிறது
மௌனம் காக்கிறது
கண்ணீர் பொழிகிறது
விம்மல் வெடிக்கிறது
கலங்கி துடிக்கிறது
தடுக்க முடியாத
கையாலாகாதனத்துடன்
வேடிகை பார்க்கிறது
என்னை அடித்து
என் கூந்தல் இழுக்கும்
என் கணவர் கைகளை
கையாலாகாதனத்துடன்
வேடிக்கை பார்க்கிறது.....
தன் தவற்றை மறைத்து
என்னை அம்பலமாக்கிய
என் கணவனை
யாரும் தடுக்கவில்லை
ஆறுதல் கூறவும் இல்லை
வம்படிக்கவும் கூடுகிறது கூட்டம்
மனைவியை அடித்தாலும்
கூடுகிறது கூட்டம்
நல்லதை எடுத்து சொல்ல
ஏன் கூடவில்லை யாரும்
இது தான் சென்னை மாநகரமா.....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...