"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

யார் சாட்சி....

மாலையில் மெல்ல மறையும்
சூரியன் கிசுகிசுப்போடு
என் காதில் உரசி
உரைக்கும் வார்த்தைகள்
நான் மறைகிறேன் மெல்ல
காதலன் வருகைக்கு
காத்திருக்கும் பெண்ணே
என் பின்னே நீ
வருவதெப்போது?
காதலன் உண்மையானவனா
உன்னை அதிகம் நேசிப்பவனா
திருமணத்திற்கு இசைபவனா
உன் காதலுக்கு
மறைந்து கொண்டிருக்கும்
நான் சாட்சி
நான் மறைவதை கண்ட
நீ சாட்சி
உன்னை விட்டு அதோ
உன் காதலன்
வழி மாறி போனதற்கு
யார் சாட்சி?
காத்திருக்கும் உன்
வேதனைக்கு யார் சாட்சி?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...