"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

புன்னகை ஜெயிக்குமா பொன் நகையை

நகை நகை நகை
என்னடி முத்துநகை
பொன் நகை நான்
சம்பாரித்து தரும்வரை
உன் புன் "நகை"யோட
உலா வாயேன்
நகை வாங்கி தரும்வரை
நானும் நகைக்கிறேன் புருஷா
உன் சாமர்த்தியத்தை எண்ணி

நகை தந்தால் அழகு என்றாள் மாமி
நகையிட்டால் அழகு என்றாள் அம்மா
புன்னகைத்தால் அழகு என்றான் கணவன்
அளவில்லா பொன் இருந்துவிட்டால்
புன்னகையின் மென்மையை
நகையின் கனம் நசுக்கிவிடுகிறதே.....
பொன் நகையின் அழகை
புன்னகையின் அழகு ஜெயிக்குமா?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...