"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

அழகு.....

அழகு என்ற மூன்றெழுத்திற்காய்
தலையணை நனைத்த நாட்கள் பல
என் தங்கையும் அழகு
என் அம்மையப்பனும் அழகு
என் தோழியரும் அழகு
பக்கத்து வீட்டு அக்காவும் அழகு
நான் மட்டும் ஏனிப்படி அழகில்லாமல்
விகார உதடுகளும் குச்சி உருவமும்....
அடுத்தவரின் அழுக்கு எண்ணங்களுக்காக
என்னை வருத்திக்கொண்டதும் உண்டு
பின் தானறிந்தேன் அதன் சூட்சமத்தை
ப்ரம்மன் என்னை படைத்ததின் அர்த்தத்தை
அழகினை ரசிப்பவனின் அந்தரங்கத்தில்
ஒருமுறையேனும் பாஞ்சாலியாவேன்
அதனால் இப்போது அழகின்மையால்
அழுவதே இல்லை நான்..
அழகில்லை என்பவரின் வார்த்தையையும்
அலட்சியபடுத்துகிறேன் ஆனந்தத்தோடும்
அலட்சியமாய் உதட்டை சுழிக்கும் சிரிப்போடும்....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...