"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

சந்தோஷம் உன்னிடமே நண்பனே....

சிரிப்பும் சுறுசுறுப்பும் போயே போச்சு
இப்படி பேசினால் சரியாச்சா?
ஆரோக்கியம் குறைந்தால்
சந்தோஷமுமா மறையும்

ப்ரச்சனைகள் தலை தூக்கினால்
சந்தோஷம் காணாம போயிருமா
வறுமையில் சந்தோஷமாக இருந்தேன்
பணம் வந்தது நிம்மதி சந்தோஷம்
ஒன்றாக கொள்ளை போய் விட்டது
இப்படி சொன்னால் எப்படி நண்பா?

உன் சந்தோஷத்தை நிர்ணயிப்பது
பணமா? நட்பா? உறவா?
எதுவுமே இல்லை அன்பு நண்பனே

சந்தோஷமும் துக்கமும்
கோபமும் வெறுப்பும்
இரக்கமும் அருவெறுப்பும்
எல்லாமே நம் மனதை பொறுத்தது

நண்பா மனதை சந்தோஷமாக
அன்பாக வைத்துக்கொள்வது
உன் கையில் மட்டுமே

இதை நீ யாரிடமும்
கேட்கவும் முடியாது
பெறவும் முடியாது...

இன்பமும் துன்பமும்
அவரவர் மனதிலே நண்பா....
இன்பத்தில் பொங்கி
துன்பத்தில் மூழ்காதே
அவசரத்தில் முடிவெடுத்து
அவஸ்தை படாதே

நின்று நிதானி மனமே
என்று நீ கட்டளையிடு நண்பா
உன் சொல்படி கேட்க
உன் மனதுக்கு கட்டளையிடு

யோசித்து திட்டமிட்டு
முடிவெடுத்துப்பார்
சந்தோஷமும் உன்னிடமே
வெற்றியும் உன்னிடமே....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...