"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

உறவுகள் உன்னை வெறுத்தப்போது....

வெறுக்காத உறவுகளும் இல்லை
அன்பாய் இருந்த சரித்திரமும் இல்லை
உறவுகள் உன்னை வெறுத்தாலும்
உன்அன்பு வெறுக்காதே யாரையுமே
உண்மை தானே நண்பனே?
இனிய் சொற்களால் இதமாய்
ஒத்தடம் கொடுத்தபோதும்
உன்னை தீண்டாத உறவுக்காக
அழுது தீர்க்காதே
உறவுகள் தான் உறவாய் இருக்கணுமா
உயிராய் இருப்பவர் உறவாய்
இருப்பதில் தவறேது?
வேண்டாத உறவுக்காக
காத்திருந்து சோர்ந்து போகாதே
உறவாய் இருப்பேன் உயிராய் இருப்பேன்
உன் இறுதி மூச்சு வரை உன்னை
அன்பாய் காப்பேன் என்றுரைக்கும்
உன் அன்பு மனைவியின் உறவு
உனக்கு கிடைத்தது பார்த்தாயா?
உறவுகள் உன்னை வெறுத்தபோது
உன்னை உயிர்ப்பித்தது இது தானே....
ஏற்றுக்கொள் இல்லாளின் அன்பை
பரிபூரண உறவு தந்த உரிமையோடு....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...