"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

வரமாட்டாயா கோபம் தணிந்து?

நீ இல்லாத வாழ்க்கை
இயந்திரமாய் போகுமே
என்னையே வெறுக்க தோணுமே
பார்ப்பவரை எல்லாம் அடிக்க ஓங்குமே
புரியாத சிறு கோபம்
உரிமையில்லா யாரை தொட்டேன்
உரிமையோடு உன்னை அடித்தேன்
அடித்தால் அன்பு மறைந்து விடுமா
வெளியில் அலைந்து திரிந்து
வேதனையோடு உள்ளே நுழைந்து
உன் முகம் பார்க்க சிரிப்பெங்கே
ஒளித்தாயோ உன் சிரிப்பை
கோபம் கண்ட என் முகத்தில்
அன்பும் மறைந்து நோக்கியதை
காண மறந்தாயோ மனைவியே
கோபம் கொண்ட குணத்தில்
அன்பும் உண்டு கண்ணே
விளையாட்டு கோபத்தில்
படி இறங்கி அம்மா வீடு போனாயே
என்னை பற்றி யோசித்தாயா
உன் முந்தானை வாசமில்லாது
எனக்கு உறக்கம் வருமா
வந்துவிடேன் மனைவியே
என் கோபம் தணிந்து
குளிர்ந்தே போனது
குளிரோ என்னை வாட்டுகிறது
வரமாட்டாயா கோபம் தணிந்து?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...