"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

என் வழி தேடி....

விதைக்கப்பட்டேன்
விடியாத வேளையிலே
இஷ்டமில்லாமலே

கருவில் வளர்ந்தேன்
எதிர்பார்ப்புகளுடன்
ஆசைகளுடன்

எதிர்பார்ப்பு தந்த
ஏமாற்றத்தில்
வெறுக்கப்பட்டேன்

ராசிகெட்டவளாம்
விடியாமூஞ்சியாம்
எதிரே வந்ததால்
துலங்காது காரியமாம்

என் தவறு எங்கே
கண்ணீர் கோடுகள்
கன்னத்தில் காய்கிறதே
முகத்தில் தெரியுமா ராசி

அன்பிலார் உளம்
நல்லவரல்லாத இடம்
எனக்கும் வேண்டாம்
போகிறேன் என் வழி தேடி

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...