"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

தாய்மை....

எத்தனை முறை சண்டையிட்டாலும்
பொறுத்து போவதும் உன் குணம்
எத்தனை முறை கோபப்பட்டாலும்
நிதானிப்பதும் உன் குணம்
எத்தனை முறை சந்தோஷித்தாலும்
புன்னகை செய்யும் உன் குணம்
நிலை தவறி போனாலும்
தாங்கி கொள்வதும் உன் குணம்
தாய்மையில் இத்தனை குணமா
அத்தனையும் எனக்கு இல்லையே
ஏனம்மா உனக்கு இத்தனை அன்பு
பெறாத பிள்ளை என் மேல்?
தத்து தானே எடுத்தாய்
உன் உயிராக என்னை ஏன் நினைக்கிறாய்
உன் முகமோ உன் குணமோ
ஒன்றும் இல்லாத என்னை
ஏனம்மா இத்தனை நேசிக்கிறாய்
தாயென்றாலே அதன் தன்மை
வந்துவிடுமா அம்மா சொல்லேன்
உன் தாய்மை என்னையும்
தாயாக்குமா அம்மா?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...