"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, December 26, 2007

அகிலத்து நாயகியே....

துன்பங்களையும் தோற்பிக்க
தோல்விகளை வெற்றியாக்க
ஆசைகள் அற்றுவிட
சக்தி மிக கொடுத்துவிடு

அண்டத்தை படைத்திட்ட
அகிலத்து நாயகியே
சூலினியே பரிபூரணியே
உன்னுள் அடக்கம்
உயிர்கள் எல்லாமே

ஆளுபவனையும்
அடக்குபவனையும்
அண்டத்தை காத்து
அமைதி சேர்த்து
ரட்சித்துவிடு

நித்திய கர்மானுஷ்டங்கள்
பல புரிந்து பாபம் தொலைக்க
காசி போகும் வழிதேடி
கங்கையில் மூழ்கி

பாபத்தை தொலைத்து
உன் பதம் சேர
அருள் புரிந்திடு
லோகத்து நாயகியே
ஆனந்த ரூபினியே
அகிலாண்டேஸ்வரியே

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...