"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

கோபம் பாபம் சர்வநாசம்...

கோபம் பாபம் சர்வநாசம்
சத்ருக்களை உண்டாக்கி
புத்தி யோசித்து சொல்லுமுன்
நாக்கு முந்திவிடும்
நெருப்பை உமிழ்ந்துவிடும்
மனதை தைக்கும் சொற்களை
அனாயசமாக வீசி விடும்
கைகள் மூளையின்
கட்டுப்பாட்டுக்குள்
அடங்காமல் ஓங்கி அறைந்துவிடும்
வெட்டி சாய்த்துவிடும்
அன்பை முறித்துவிடும்
அருகாமை விலக்கியும்
சொந்தங்களை விலக்கி
உறவுகளை வெறுத்தும்
நட்பை கொன்றும்
அம்மையப்பனை கேள்வி கேட்கும்
வார்த்தைகள் தடித்து
விரோதத்தை வளர்க்கும்
புன்னகை மறந்து
சிநேகம் தொலைந்து
கண்டாலும் முகம் திருப்பி
மனம் வருந்த வைக்கும்
கோபம் பாபம்
சர்வநாசம்
வேண்டாம் கோபம்
வீசிவிடு தூரம்
கோபத்தை விலக்கி
வந்துவிடு என்னிடம்
அன்புடன் கைக்கோர்க்க...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...