"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

காது குத்தி....

மடி மேல் இருத்தி
கதறும் குரலை
சமாதானப்படுத்தி
வியர்வை வழிய
பொன் காதணி
காதில் வைத்து
குத்தும் வேளையில்
அம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆ
அலறும் சத்தத்தில்
வாழை பழத்தை
வாயில் நுழைக்க
கண்ணில் நிறைந்த நீர்
வாயில் நிறைந்த பழம்
திரும்ப முடியாதப்படி
இறுக்கி பிடித்த
மாமாவின் இரும்பு பிடி
காதில் ரத்தத்துடன் சேர்ந்து
பொன் காதணி மினுக்க
இனிதே நடந்தது
காது குத்தும் விழா....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...