"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

முயற்சி கொடுப்பது வெற்றி அல்லது அனுபவம்....

வெற்றியும் தோல்வியும் உந்தன் கைகளில்
வாழ்வின் பெரும் பகுதி உந்தன் வெற்றியில்
முயற்சியில் சிறிதே பின் தங்கினாலும்
முதல் முயற்சியில் ஒரு படி சறுக்கினாலும்
சோர்ந்து போய் உட்கார்ந்துவிடாதே

வெற்றிக்கு சின்ன இடைவெளி தராதே
முயற்சிக்கு பலன் வெற்றி இல்லையெனினும்
அனுபவத்தை கொடுத்துவிட்டு செல்கிறதே

சொல்லிலும் செயலிலும் நேர்மை
பேசும் வார்த்தையில் என்றும் இனிமை
தகிக்கும் வார்த்தைகளுக்கும் பதிலில் குளுமை
அத்தனையும் உனக்கு தருவது வெற்றியே

தூற்றுவோரை புன்னகையோடு நின்று பார்
அதுவும் உனக்கு வெற்றியே
முயற்சியில் சற்றே கலங்கினாலும்
மனம் மட்டும் தளர்ந்து விடாதே

வெற்றி கனி கையில் கிட்டினாலும் சரி
தோல்வியின் அனுபவமாக பாடம் ஆனாலும் சரி
முயற்சியை மட்டும் விடவே விடாதே
உந்தன் வெற்றிக்கு முதல் படி
என்றும் முயற்சி ஒன்று தான்

நம்பிக்கையோடு முயற்சித்து பார்
மனிதரின் மனம் உன் வசம்....
நேசத்தை கொடுத்து மனதை வசமாக்கு

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...