"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

சந்தேகம் கொள்ளாதே கணவனே

மனம் ஒன்றும் சரியில்லை
வழி ஒன்றும் தெரியவில்லை
ஏக்கங்களே வாழ்வாகிவிட்டபடியால்
மனதை சமன் செய்யமுடியவில்லை

பேசாதிருந்தாலும் கவலை
பேசினாலும் தொல்லை
என்ன தான் தீர்வு இதற்கு

நிலையில்லா உலகில்
என்னை நிலைநிறுத்திக்கொள்ள
எடுக்கும் முயற்சிகள் எல்லாமே
முடிவில்லா தொடக்கங்கள்

கைபிடித்து நடைபழக்கிய
தந்தையும் இல்லை எனக்காக பேச
அடிபட்டு துவண்டு விழுந்தால்
தாயும் இல்லை தாங்கி கொள்ள

அம்மாவை அடிக்காதே அப்பா
என்று அவர் கைப்பிடிக்க
குழந்தை செல்வமும் இல்லையே

என்ன தான் செய்வேன்
இனி பொறுப்பதில்லை
அடித்தால் பொறுக்கலாம்
சுடுசொல் வீசினால்
அமைதி காக்கலாம்

சந்தேகத்தில் உமிழ்ந்தால்
அணைத்து கொள்வது தான் சரி
அக்னி பகவானே நீயே துணை
எத்தனை முறை தான்
சந்தேக தீயில் குளிப்பது

இன்னுமொருமுறை
என்னை சந்தேகப்பட்டால்
அக்னிபகவானே நீயே
என்னை அணைத்துகொள்

என்னை இழந்து
தன்னை உணரட்டும்
அவர் தவறுகளே
அவரை திருத்தட்டும்...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...