"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

விலகி போகாதே பெண்ணே....

மனதின் வெறுமை
ஓலமாய் அலறுகிறது
ஓரமாய் உட்கார்ந்து
அழ தோன்றுகிறது
சிந்திக்க மறுக்கின்றது
மூளை செயலற்று போனது
நித்திரை கொள்ள மறக்கிறது
ஏனடி என்னை தவிக்க விட்டாய்
கோபத்தில் அறையாமல்
ஏனடி வெறுத்து ஓடினாய்
உன்னையன்றி நான் எதையும்
நினைப்பதில்லையே
உன் உருவம் என் மனதில்
அச்சாய் பதிந்த பின்
எப்படியடி மறக்க தோன்றும்
உன் காதலை மறுத்தது
என் தவறே பெண்ணே
நீ என்னையே வெறுத்துவிட்டாயே
உன் பின் என்னை
சுற்ற வைத்து விட்டாயே
உண்மை காதலை நான்
உணர்ந்த நொடி
நீ என்னை விட்டு விலகியதேன்
கோபம் கொள் ஆனால்
விலகி போகாதே
எனக்காக நீ காத்திருந்தது போய்
இதோ உனக்காக
ஒவ்வொரு விநாடியும்
எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கிறேன்
பெண்ணே என் தவறை பொறுத்து
ஏற்று கொள்வாயா?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...